மரணம் மறுநாளில் என்றாலும் மணம் தர மறுக்காத மரகதங்கள் தன்னுள் இருக்கும் தேன் முழுவதையும் மறுக்காமல் கொடுக்கும் மகரந்தகள் மடியும் பொழுதிலும் காயாகும் கனிவு நமக்கெல்லாம் ஏது அந்த துணிவு? நீ இல்லாத இடமும் உண்டா? உன் வாசம் நுழையாத மனமும் உண்டா? சுவாசத்திலும் உன் மணம் - சிலர் பாசத்திலும் உன் மணம் நாளை மரிக்கும் மலர்களே மகிழ்வுடன் இருக்கும் போது என்றோ மரிக்கும் நாம் ஏன் மகிழ்ந்திருக்க கூடாது? மகிழ்ந்தே இருப்போம் - பிறரை முடிந்தவரை மகிழ்வித்தே இருப்போம்
Dear Veni Superb one. No words to give reply to this. I canonly remember the song malargalai pol thangai urangugiral from Pasam Malar. love viji
அன்புள்ள விஜி மா, நன்றி, நன்றி, நன்றி. என்றுமே என் கவிதைகளுக்கு முதலில் வாழ்த்து தெரிவிப்பது நீங்களாகவே இருப்பதில் என் மணம் சொல்லொணா உவகை கொண்டது. மிகவும் மகிழ்ந்தேன்
Manam parapum malar pol nalum kavi manam parupum Veni thene Un magarantham thedi varugudu nal thorum pala IL thenikale!!!!!! MALAR manam(kavithai) migavum ennakku pidithuladu. Vazhga Valamudun!
அன்புள்ள சரோஜ், கவிதை படித்து கருத்தையும் இன்னொரு கவிதையாய் சொன்ன கலைக் காதலிக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. உங்கள் பின்னூட்டம் கவிதையாய் இருப்பது மகிழ்ச்சி. கவிதையையும் நீங்கள் ஒரு கை பார்த்தால் இன்னும் எனக்கு பெரு மகிழ்ச்சி. காத்திருக்கிறேன். உங்கள் கவிதைக்காக.
IL ennum thottaththile Veniyin kavidhai malar koottaththile Karuththu manadhin Ottaththile Adhi kana manam vaattathile Kandu magizhndadai kattinen pinnottathile Anbhudan pad
அன்புள்ள பத்மினி மா, உங்கள் பின்னூட்டத்தையும் கூட பின்னி எடுக்கறீங்க மா. சான்ஸ்- இல்லை. அள்ளி தெளித்தாற்போல் அங்கங்கே சொற்களை வைத்து, உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பின்னூட்டம் தந்த என் இனிய அன்னை பத்மினிக்கு - இரு கரம் குவித்த வணக்கங்களும், நன்றிகளும் ...
dear veni romba romba azhagana kavidai malargalai madiri. manadai mayakkugiradu ungal kavidai vasam. ganges