தெருவெங்கும் சிதறிய செந்நீரின் கறை உங்கள் "கறை" வேட்டியில் பட்டுவிடாமல் ஒதுங்கி நின்றீர்கள். காரிலிருந்து இறங்கி மிகுந்த அக்கறையுடன் ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தீர்கள். கதறிய காவலன் எந்த நிலையத்தை சேர்ந்தவனென்று பட்டிமன்றம் ஆரம்பித்தீர்கள். மானம் கெட்ட உங்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்த்தது தவறென்று நிரூபித்தீர்கள். தமிழினம் அழிக்கப்பட்டபோது ரசித்தது போலவே வெற்றிவேலையும் ரசித்தீர்கள். இந்தக் கவிதைக்கு கருவாகி தமிழின் மேல் எச்சில் உமிழ்ந்து போனீர்கள் மனித உருவில் திரியும் சாத்தான்களே! -நிலாரசிகன்.
Nilarasigan, Migavum parthaabamaaga ulladhu Youtube il paartha pozhudhu.. Vetkakedu.. Nalla savukkadi seerazhiyum manidhabhi manathirkku! sriniketan