Words of Sathguru SaiBaba!

Discussion in 'Pujas Prayers & Slokas' started by itsmebhagi, Nov 22, 2012.

  1. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]


    ஸ்திரமான நம்பிக்கை

    சாயிநாதருக்கு, இரண்டு கைகளையும் ( வணக்கம் செய்பவை) தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்)ஸ்திரமான நம்பிக்கையையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.
     
    2 people like this.
  2. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female


    [​IMG]


    எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள். மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
     
    1 person likes this.
  3. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால்
    உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்.
     
    1 person likes this.
  4. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female

    [​IMG]



    எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள். இதைச் செய்யத் தங்களால் இயலாவிடில் இங்கே இரவும்,பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள். இதைத் தாங்கள் செய்து கொண்டே போகும் போது தங்களின் எண்ணங்கள் ஒரே இலக்கில் குவிக்கப்படும். தியானம் செய்பவர்,தியானம்,தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும். தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித் திரளுடன் ஒன்றி,பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].
     
  5. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    ஒருவர் என்னைத் தியானித்து, என் பெயரை உச்சரித்து, எனது லீலைகளைப் பாடி, இவ்வாறு நானாகவே மாறிவிட்டால், அவரது கர்மா அழிந்து போகிறது.
    நான் எப்போதும் அவர் அருகிலேயே இருப்பேன். அவர் தவறும்படி நான் விடமாட்டேன். இரவும் பகலும் அவர்களைப்பற்றியே நினைத்திருப்பேன். எனது பக்தன் ஆயிரம் மைல்களுக்கப்பால் இறந்தாலும், அவன் இறக்கும் சமயத்தில் அவனை என்னை நோக்கி இழுத்துக் கொள்வேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.​


     
    1 person likes this.
  6. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துக்கொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குணமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் ! இச்செயல்களின் நோக்கம் இதுவே..

     
  7. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]


    இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன்,செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும்,செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!

    எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
     
  8. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சுபம் ஏற்படும்
    [​IMG]


    நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
     
  9. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female


    [​IMG]



    எனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம்.
     
    1 person likes this.
  10. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female



    [​IMG]




    வைதீகம், பட்டினி(விரதம்) இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.



    பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.

    "பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.
    "இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.
    "யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.
    "அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார்.
    நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.

    பாபாவின் மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின் சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.

    பொதுவாக சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள்.
    எனவே உங்களது மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்கள் 9 வார சாய்பாபா விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

    அதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். "சாயி சாயி" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம்.
    அது ஆறு கடலுடன் இரண்டற கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய் சாய்ராம்.
     
    1 person likes this.

Share This Page