Words of Sathguru SaiBaba!

Discussion in 'Pujas Prayers & Slokas' started by itsmebhagi, Nov 22, 2012.

  1. memyself

    memyself Junior IL'ite

    Messages:
    45
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
  2. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி,நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி,சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும். குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும்,ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.​
    -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
     
    2 people like this.
  3. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]


    இந்த சராசர சிருஷ்டியனைத்திலும், உள்ளும் புறமும் நானே நிறைந்துள்ளேன். உங்கள் செயல்கள் அனைத்தும் எனக்குத் தெளிவாகத் தெரியும்.இதை எப்போதும் மறக்காமலிருங்கள்.
    நான் உங்கள் இதயத்துள் வசிப்பவன். என்னை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு எந்த துன்பமும் இருக்காது. என்னை மறந்தவர்கள் மாத்திரம் மாயையின் சவுக்கடிகளை ஏற்பார்கள்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
     
    1 person likes this.
  4. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவலையை விட்டொழியும்

    [​IMG]


    "கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை.ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

     
    1 person likes this.
  5. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பிரேமை

    [​IMG]

    சிருஷ்டியின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன்.-
    ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
     
    1 person likes this.
  6. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female

    சாயி சாயி



    [​IMG]

    சாய் பாபாவை எப்போதும் நினைவில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனின் உடல் மனம் இரண்டும் சிறப்பாக இருக்கும் போது ஒவ்வொரு வினாடியும் பாபாவை நினைத்துக் கொள்ள வேண்டும்.
    உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எப்போதும் "சாயி சாயி" என்று நினைவு வைத்துக் கொள்வீர்கள் என்றால் இந்த உலகின் பிடிகளிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
     
    1 person likes this.
  7. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]


    அந்த அல்லா என்னை மறக்கமாட்டார். நான் உங்களை மறக்க இயலாது. நீங்கள் என் அனுக்கிரகத்தை விரும்புகிறீர்கள். நான் உங்கள் விசுவாசத்தை விரும்புகிறேன். அன்பால் என் பாதத்தைக் கட்டிப்பிடித்துள்ளீர்கள். பரவசமடைந்து உங்களை நான் கட்டித் தழுவுகிறேன். இப்படைப்பு அன்பு மயம். நீங்கள் அன்பே வடிவானவர்கள். நீங்கள் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். நான் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவன். இப்படியே இருந்து விடலாம்! இங்கேயே இருந்து விடலாம்!- ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

     
    2 people like this.
  8. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]


    புலன் அனைத்தும்,மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாகப் படட்டும்.வேறு எவ்விதப் பொருள்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம். உடல்,செல்வம்,வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரபடுத்துங்கள்.
    அப்போது அதுஅமைதியாகவும்,அடக்கமாகவும்,கவலையற்றும் இருக்கும்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
     
  9. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    தைரியத்தை இழந்துவிடதே; உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டாம்; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாளகுணமுள்ளவர்;உன்னை ரட்சிப்பார்"- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].
     
  10. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    முழு நம்பிக்கை

    [​IMG]



    என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது. விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன். ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள். உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள். உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன். இது என்னுடைய வாக்கு தானம்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
     

Share This Page