Maari malai muzhainchil manni kidandhu urangum Seeriya singam arivutru thee vizhiththu Veri mayir ponga eppaadum perndhu udhari Moori nimirndhu muzhangi purappattu Podharumaa pole nee poovaippoo vannaa un Koyil ninru ingngane pondharuli koppudaiya Seeriya singaasanaththu irundhu yaam vandha Kaariyam aaraayndhu arulelor embaavaay
Dear DD @PavithraS , Thanks for sharing the video link. still we have seven more days of Divine Pasurams to enjoy together! May Goddess Paavai bless you and your family.
Dear @ChandrikaV sister, Glad you are enjoying this pilgrimage in Margazhi! Looking forward to your company during the remaining days of this holy month. May Goddess Andal bless you and your family.
Dear DD @Divyakhyathi , Thanks for your lovely transliteration for the pasuram-23. Looking forward to your company during the remaining days of this holy month. May Goddess Andal bless you and your family.
Respected Maa Just read your detailed explanation on Nappinai Goddess. Yes..from the explanation it's clear that she's Radha ji...consort of Lord Krishna in Vrindavana. Thanks for your blessings.
08.01.2017இன்று வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில்ஜங்காசுரன்என்ற (முரன்) அவனுடைய மகன்மருவாசுரனும்தேவர்களை துன்புறுத்திவந்தனர். இதனால்விஷ்ணு பகவானிடம்தேவர்கள், அசுரர்களால்தாங்கள்படும்துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால்மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன்போர்புரிந்தார். இந்த போர்பல வருடங்கள்தொடர்ந்து நடந்துக்கொண்டேஇருந்தது. இதனால்சோர்வடைந்த ஸ்ரீமந்நாராயணன், ஒருகுகையில்நன்றாக உறங்கினார். அப்போது அவர்உடலில்இருந்து ஒரு பெண்சக்தி தோன்றி, போர்நடக்கும்களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும்ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது. தன்எதிரில்ஒரு பெண்தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதைதன்உடலில்இருந்து வெளிப்பட்டது என்பதையும்உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும்தெரிந்து, அதனைவாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர்சூட்டினார். “நீ தோன்றிய இந்தநாளில், யார்என்னை நினைத்து விரதம்இருக்கிறார்களோ அவர்களுக்கு நீதுணை இரு. பக்தர்களின்வாழ்க்கையில்சகல நன்மைகளையும்அருளவேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும்தன்னுள்ஐக்கிய படுத்திக்கொண்டார்ஸ்ரீமந்நாராயணன். ஏகாதசி விரதத்தின்மகிமை ருக்மாங்கதன்என்ற அரசர்இருந்தார். அவர்ஏகாதசி விரதத்தின்மகிமையை பற்றி தெரிந்துக்கொண்டார். அதனால்தன்நாட்டு மக்கள்யாவரும்பாவத்தில்இருந்து விடுபட்டு, புண்ணியம்பெற வேண்டும்என்ற எண்ணத்தில்ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள்அனைவரும்அனுசரிக்க வேண்டும்என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன்ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள்ராஜ தண்டனைக்கு ஆளாவார்கள்என்றும்ஆணையிட்டார். இதனால்எட்டு வயது குழந்தைகள்முதல்முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள். ஏகாதசி விரதத்தின்மகிமையால்நல்ல பலன்கிடைத்தது. நாடும், அந்நாட்டுமக்களும், அரசரும்சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள். அரசரால்திண்டாடிய மோகினி அரசர்ருக்மாங்கதன், தன்நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால்துஷ்ட மோகினிக்கு வேலை இல்லாமல்போனது. ஆம்யார்ஏகாதசி விரதம்இல்லாமல்இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தரவேண்டிய துஷ்டதேவதைக்கு வேலை, அரசர்ருக்மாங்கதன்நாட்டில்மட்டும்அதற்கு வேலை இல்லாமல்போனது. காரணம்மக்கள்அனைவரும்ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில்விஷ்ணு பகவானிடம்ருக்மாங்கதனை பற்றி புகார்சொன்னாள். தன்பக்தனான ருக்மாங்கதன், தன்நாட்டு மக்கள்மேல்அதிக பிரியத்துடன்இருப்பதால்இப்படி செயல்படுகிறான்என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணு பகவான், ருக்மாங்கதன்முன்தோன்றி, “நீ யாரையும்ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம்என்பது புண்ணியத்தை கொடுக்க கூடியது. புண்ணியம்கிடைக்க வேண்டும்என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீயாரையும்கட்டாயப்படுத்த வேண்டாம்.” என்று தன்பக்தனான அரசர்ருக்மாங்கதனுக்கு சொன்னார்ஸ்ரீவிஷ்ணு பகவான். இப்படி பாவத்தை போக்கி புண்ணியம்தருவது தான்ஏகாதசி விரதத்தின்மகிமை. ஏகாதசி விரதம்யார்இருக்கவில்லையோ அவர்களிடம்தான்துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம். நோய்வாய்பட்டவர்கள்விரதத்தை கடைபிடிக்கமுடியுமா? ஏகாதசி விரதம்கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும்என்கிறது சாஸ்திரம். ஆனால்வியாதியால்அவதிப்படுபவர்கள்ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கமுடியாதல்லவா.? ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள்ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும்முன்னதாக இறைவனை வணங்கி விட்டு சாப்பிடலாம்எனகிறது சாஸ்திரம். ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது? ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம்போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும்உச்சரிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில்பெருமாள்கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல்வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும்இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும்படிக்க வேண்டும். மறுநாள்துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்தபிறகு, ஒருவருக்காவது அன்னதானம்செய்த பிறகு சாப்பிடவேண்டும். விரதத்தை கடைபிடித்தவர்கள்நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில்படாமல்சாப்பிட வேண்டும். சாப்பிடும்முன்இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும்என்கிறது சாஸ்திரம். இதனால்புண்ணியம்கிட்டும். வைகுண்டஏகாதசி விரதம்இருந்தால்முன்னோர்களின்சாபமும்நீங்கிடும். சொர்க்கவாசல்உருவான கதை- விஷ்ணு பகவான்ஆழ்ந்த உறக்கத்தில்இருந்தபோது, அவருடைய இருகாதில்இருந்து மது, கைடபர்என்ற இரு அசுரர்கள்தோன்றினார்கள். அந்த இருவரும்தேவர்களை மிகவும்கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல்திணறினர்தேவர்கள். அதனால்விஷ்ணுவின்சக்தியால்உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான்ஒருவரே அடக்க முடியும்என்ற முடிவில்பகவானிடம்தேவர்கள்முறையிட, பெருமாள்மது, கைடபருடன்போர்செய்தார். ஸ்ரீமந்நாராயணனிடம்யுத்தம்செய்ய முடியாமல்அவரிடம்அசுர சகோதரர்கள்சரண்அடைந்தார்கள். “பகவானே…தங்களின்சக்தியால்நாங்கள்உருவானதால்எங்களுக்கு நீங்கள்கருனை காட்டவேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில்பெருமாளுடன்இருக்கும்பாக்கியத்தையும்பெற்றார்கள்இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல்பலரும்இந்த பாக்கியம்பெறவேண்டும்என்று எஎண்ணி அசுரர்களாக இருந்தாலும்நல்ல மனதுடன்பெருமாளிடம்வேண்டினர். “எம்பெருமானே…தாங்கள்வைகுண்ட ஏகாதசி நாளில்திருவரங்க வடக்குவாசல்வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனிதவடிவம்) தாங்கள்வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்துவருபவர்களுக்கும், அவர்கள்தெரிந்து செய்தபாவங்கள், அறியாமல்செய்த பாவங்கள்யாவும்நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்கவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டனர்அசுர சகோதரர்கள். . அவர்களின்வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வைகுண்டஏகாதசியன்று சொர்க்கவாசல்திறக்கப்பட்டு, பெருமாள்பவனிவரும்நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது. இந்த ஏகாதசிநன்னாளில், “ஓம்நமோநாராயணாய” என்றுஉச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள்நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின்அருளையும்பெறுவோம். மார்கழி மாதம் 24ம் நாள். ஞாயிற்றுக்கிழமை. (ஏகாதசி). திருப்பாவை பாசுரம் - 24. அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். ராகம், தாளம்- சிந்து பைரவி ஆதி. பொருள்: தென்னிலங்கை - அழகியஇலங்கை, தெற்கிலுள்ளஇலங்கை; செற்றாய் - ஜெயித்தாய், அழித்தாய்; பொன்ற - கட்டுக்குலையும்படி, அழியும்படி; குணிலாய் - எறிதடியாய், கன்றுவடிவில்வத்ஸாசுரன், விளாமரவடிவில்கபித்தாசுரன்; சேவகம் - வீர்யம், லீலாவிபூதி, ஏவியதைசெய்வது, குற்றேவல்; சகடம் - சக்கரம், சகடாசுரன்; கழல் - கால், காலணி, ஆபரணம்; ஏத்தி - புகழ்ந்து, பாடி.. மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம். We worship your feet which measured the world then, we worship your fame of winning over the king of Southern Lanka, We worship thine valour in breaking the ogre who came like a cart, We worship thy strength which threw the calf on the tree, we worship thine goodness in making the mountain as an umbrella, And we worship the great spear in your hand, which led to your victory, We have come hear to sing always for ever your praises, And get as gift the drums to sing, and worship our Goddess Pavai. May Lord Vishnu and Thayaar Andal bless us all in abundance.