The Everlasting Charm Of Andal's Thiruppavai

Discussion in 'Religious places & Spiritual people' started by suryakala, Dec 16, 2017.

  1. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL VISHNU1.jpg

    மார்கழி மாதம்-7ம் நாள், வெள்ளிக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 7.

    கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
    சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
    ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
    நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
    தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam-

    Bhairavi- Misrachapu.

    பொருள்:

    அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

    விளக்கம்:

    பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள்.
    வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்..

    Did you not hear, Oh slow witted girl, the twittering sound of black birds of the morn, Which sounds like a talk between them, Did you not hear the tingling sound, When the big and small coin like pendants, Rub against each other, Did you not hear the sound of vigorous pull, Of the curd churner being pulled, By the flower bedecked cow herdesses, Did you not hear the sound of twirling curd, When churned using the mixer, Oh, leader among girls, How can you sleep, When they sing the names sweetly. Of Narayana and Kesava, Oh, She who is sparkling, Be pleased to open the door, And worship our goddess Pavai.

    May Lord Krishna and Thayar Andal bless us all in abundance.

     
    vaidehi71 likes this.
  3. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL VISHNU4.jpg

    மார்கழி மாதம் 8ம நாள்.

    சனிக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 8

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
    கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    Ragam' Thalam:
    Dhanyasi- Adi.

    பொருள்:

    மாவாய் - குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயை;
    மல்லர் - சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்யுத்தம் செய்பவர்களை;
    மாட்டிய - அழியச் செய்த; ஆ ஆ என்று அருள் - ஆ ஆ என்று இரங்கி...

    மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

    விளக்கம்:

    திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.

    The eastern sky has become white, The buffalos are free to walk and graze, The remaining lasses, have stopped from going, All those who wanted to go, and have come to call you, Oh girl filled with happiness, Please wake up. Let us all sing and get gifts, From Him who has killed the horse like ogre, By pulling apart his mouth, From Him who killed the wrestlers, Sent to kill him, From the Narayana, who is first among the Gods, And prostrate before him.. Please hear what we tell. And decide for yourself, And worship our Goddess Pavai.



     
    vaidehi71 likes this.
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL3.jpg

    மார்கழி மாதம் 9ம் நாள்.

    திருப்பாவை பாசுரம்- 9.

    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

    ராகம்- ஹமீர் கல்யாணி. தாளம் ஆதி.

    அனந்தல் - (களைப்பினால்) உறங்குகிறாளா? ஏமப்பட்டாள் - காவலில்இடப்பட்டாள்;

    பொருள்:

    பிரகாசமான நவரத்தினங்களால்கட்டப்பட்டமாளிகையில், சுற்றிச்சூழவிளக்கெரிய, நறுமண திரவியம்மணம்வீச, அழகியபஞ்சுமெத்தையில்உறங்கும்எங்கள்மாமன்மகளே! உன்வீட்டு மணிக்கதவைத்திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளைநீஎழுப்பு. உன்மகளை எத்தனைநேரமாக நாங்கள்கூவிஅழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள்ஊமையா? செவிடா? சோம்பல்அவளைஆட்கொண்டுவிட்டதா? அல்லதுஎழமுடியாதபடிஏதாவதுமந்திரத்தில்சிக்கிவிட்டாளா? உடனேஎழு. எங்களுடன்இணைந்துமாயங்கள்செய்பவன், மாதவத்துக்குசொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம்அந்த நாராயணனின் திருநாமங்களைச்சொல்.

    Oh my uncle’s daughter, who sleeps, in the soft cotton bed, In the pearl filled Villa, Well lit from all sides, And full of the smoke of incense, Please open the ornamental door. Oh aunt, why don’t you wake her up, Is your daughter dumb or deaf, Or down right lazy, Or she is in trance of deep pleasurable sleep, Let us all call him the great enchanter, Madhavan and he who lives in Vaikunta, By several of His names, And get benefited, And worship the Goddess Pavai.

    May Thayar Andal and Perumal bless us all.

     
    ChandrikaV and vaidehi71 like this.
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDALP.jpg


    ANDALS.jpg

    மார்கழி மாதம் 10ம் நாள்.

    திங்கள் கிழமை.

    ஸ்ரீஆண்டாள் தாயார் திருவடி சரணம்.

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார்
    திறலழியச் சென்று செருச் செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்-

    Ragam, Thalam.
    Huseni- Misrachapu.

    பொருள்:

    கற்றுக் கறவை - கன்று போல உள்ள இளம் பசுக்கள்;
    செற்றார் - தகுதியற்ற முறையிலும் கர்வத்தினாலும் மோதுகின்ற எதிரிகள்; செரு - போர்; புற்று அரவு அல்குல் - புற்றுக்குள் நுழையும் பாம்பின் குறுகிய பாகத்தைப் போன்ற இடை, புனமயில் - காட்டு மயில்; சிற்றாது - அசைத்து கொடுக்காமல்; எற்றுக்கு - எதற்காக; உறங்கும் பொருள் - உறங்கும் நோக்கம்;

    முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

    Oh daughter of the cattle baron, who milks herds of cows, And wages war on enemies and makes his enemies loose their strength, Oh Golden tendril, Oh lass who has the mount of venus, Like the hood of the snake, wake up and come, when your flock of friends, Have come to your courtyard, And sing of Krishna, who has the colour of the cloud, Oh rich, rich lady, How can you neither move nor talk, And lie in deep trance, And not worship our Goddess pavai.

     
    ChandrikaV and vaidehi71 like this.
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL ELEP.jpg
    ANDAL 21.jpg

    மார்கழி மாதம் 11ம் நாள். செவ்வாய்க்கிழமை.
    திருப்பாவை பாசுரம் 11.

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார்
    திறலழியச் சென்று செருச் செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

    ராகம், தாளம்- Huseni, Misrachapu.

    பொருள்:

    கற்றுக் கறவை - கன்று போல உள்ள இளம் பசுக்கள்; செற்றார் - தகுதியற்ற முறையிலும் கர்வத்தினாலும் மோதுகின்ற எதிரிகள்; செரு - போர்; புற்று அரவு அல்குல் - புற்றுக்குள் நுழையும் பாம்பின் குறுகிய பாகத்தைப் போன்ற இடை, புனமயில் - காட்டு மயில்; சிற்றாது - அசைத்து கொடுக்காமல்; எற்றுக்கு - எதற்காக; உறங்கும் பொருள் - உறங்கும் நோக்கம்..

    கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்கறப்பவனாகவும், தங்களைப்பகைத்தவர்களை எதிர்த்துநின்று போரிடும்தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத்துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில்இருக்கும்பாம்பின்படத்தைப்போன்ற அல்குலை உடையமயில்போன்றவளே! நம்சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத்தோழியரும்உன்வீட்டு வாசலில் வந்து கூடி விட்டார்கள். அவர்கள் மேக வண்ணனாகிய கண்ண கண்ணனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.செல்வத்தையும், பெண்மையையும்புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம்கேட்டும்அசையாமலும், பேசாமலும்உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால்உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?

    விளக்கம்:

    நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

    Oh daughter of the cattle baron, Who milks herds of cows, And wages war on enemies
    And makes his enemies loose their strength, Oh Golden tendril, Oh lass who has the mount of venus,
    Like the hood of the snake, Wake up and come, when your flock of friends, Have come to your courtyard, And sing of Krishna, Who has the colour of the cloud, Oh rich, rich lady,
    How can you neither move nor talk, And lie in deep trance, and not worship or Goddess Pavai.

     
    vaidehi71 and ChandrikaV like this.
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDALL.jpg

    மார்கழி 12.
    திருப்பாவை பாசுரம்- 12.

    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
    பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
    அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam. KedaraGowla- Adi.

    பொருள்:

    தென் இலங்கை - தெற்கு திசையிலுள்ளஇலங்கை, அழகியசெல்வத்துடைய இலங்கை;

    பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

    விளக்கம்:

    எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

    Hey, sister of the rich one, who owned, the mooing she buffalo with a calf, Which took pity on the calf, And gave out plenty,
    Of milk to it through its udder, And made his courtyard slushy with milk, We are assembled in thine yard, In the dripping fog, And sing about Him, Who killed in anger the king of Southern Lanka, And who is very dear one, But open your mouth, you don’t.. At least wake up now, Why this very deep slumber, For people of all houses around, Have already become alert And are ready to worship our Goddess Pavai.

    May Perumal and Thayar Andal bless us all in abundance.

     
    ChandrikaV and vaidehi71 like this.
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDALK.jpg

    மார்கழி 13 திருப்பாவை
    பாசுரம் 13

    புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
    குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
    பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam-
    Atana, Misrachapu.

    பொருள்:

    புள்ளின் வாய் கீண்டான் - பறவையின் (பாகாசுரன்) வாயைப் பிளந்து கொன்ற (கிருஷ்ணன்); பொல்லா அரக்கன் - பொல்லாத அரக்கன் (ராவணன்), பொல்லாங்குகளுக்கு உறைவிடமானவன்; பாவைக் களம் - நோன்பு நோற்கும் இடம்; போது அரி கண்ணினாய் - பூவைப் போலும், மானைப் போலும் உள்ள கண்களை உடையவளே...

    பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

    விளக்கம்:

    "கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்?
    இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

    கண்ணழகு மிகுந்தவன் கண்ணன். அவனைத் தாமரைக் கண்ணன் என்றும் கூறுவார்கள். கண்ணனையும் இராமனையும் சேர்த்துப் பாட இசைந்து, இப் பாடலில் "புள்ளின் வாய்க் கீண்டானை' என்று கண்ணனையும், 'பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை' என்று இராமனையும் பாடினார்கள். கண்ணன் மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு நீர்நிலைக்குச் செல்லும்போது, கம்சனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் கொக்கு வடிவத்தில் இருந்துகொண்டு கண்ணனருகில் ஓடிவந்தான். கண்ணன் அந்தப் பகாசுரன் மீது பாய்ந்து அதன் அலகுகளை இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்ற நிகழ்ச்சியையும், ராமன், பொல்லாவரக்கனான ராவணனை எளிதில் அழித்த வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டே எல்லாப் பெண்களும், ஒன்றுசேரும் இடமாகிய பாவைக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள். வானத்தில் வியாழன் நட்சத்திரம் மறைந்து வெள்ளியும் தோன்றிவிட்டது. பறவைகளும் சிலம்புகின்றன. இத்தகைய நல்ல வேளையில் யமுனையாற்றில் குள்ளக்குளிர அமிழ்ந்து நீராடாமல் படுத்திருக்கிறாயே! இது ஒரு நன்னாள்! தனிமையில் கொள்ளும் இறையின்பமும் கள்ளம். இப்படிப்பட்ட கள்ளம் தவிர்த்து எங்களோடு சேர்ந்து கண்ணனை அனுபவிக்கலாம் எழுந்து வா! என்று அழைக்கிறார்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது.

    The lasses have reached, The place of prayer for Pavai, Singing the fame of our Lord. Who killed the ogre who came like a stork. And who cut off the heads of the bad ogre, One by one. The nevus has risen in the morn, The Jupiter has vanished from the sky, The birds are making lot of sound, Of beautiful one with wide eyes red as a flower. Without taking bath by dipping again and again, In ice cold water, Would you prefer to sleep. Oh lass, On this holy day, Do not stay aside, And come to bathe with us. And worship our Goddess Pavai.



     
    ChandrikaV and vaidehi71 like this.
  9. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL VAIKUNDA.png

    ANDAL LAXMI.JPG

    மார்கழி மாதம்14ம் நாள், வெள்ளிக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 14.

    உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
    செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

    பொருள்:

    வாவி - குளம்; செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து - செங்கழு நீர் மலர்கள் மலர்ந்து(தாமரை); ஆம்பல் வாய் கூம்பின - அல்லி(கரு நெய்தல்) மலர்கள் குவித்து கொண்டன; சங்கு இடுவான் - சங்கு ஊதி..

    எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

    விளக்கம்:

    கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

    எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர்மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். கதிரவன் தோன்றியதும் செங்கழுநீர் மலர் மலர்ந்து, ஆம்பல் வாய் மூடிக் கொள்வதை ஓரிடத்தில் பார்த்த பெண்கள், அதையே அனுமான ப்ரமாணமாகக்கொண்டு, உங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வாவியில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின என்றும், செங்கற் பொடியின் நிறத்தைப் போன்று செந்நிறமுடைய ஆடையை அணிந்த துறவியர் சத்துவகுணம் நிறைந்த விடியற்காலையை உணர்த்துவதற்காகச் சங்கு ஒலிக்கத் தாங்கள் தங்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். சிலர் சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்று கூறி, வாய்ச்சொல்லில் வல்லவளே எங்களை எழுப்புவதாகச் சொன்னாயே தவிர செயலில் காட்டவில்லையே! இதற்கு நீ வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை! ஆனால், நீ பேச்சில் வல்லவள், அனுமன் முதன் முதலில் ராமனைச் சந்தித்தபோது அவனோடு சிறிது உரையாடினான். அவனுடைய பேச்சில் ராமன் தன் மனதைப் பறிகொடுத்தான்.
    நீயும் உன் சொற்களால் கண்ணனின் மனதைக் கவரக்கூடியவள். பெண்களில் சிறந்தவளே! கண்ணன் அன்புமிக்க அடியார்களுக்கு நான்கு கைகளைக் கொண்டவனாகவே காட்சியளிப்பான்; பகைவர்களுக்குக் காட்சியளிக்கும்போது இரண்டு கைகளை உடையவனாகவே தோன்றுவான். கண்ணன் கமலக்கண்ணன்! அவனுடைய கண்ணழகையும், மிகவும் ஒளிபொருந்திய திருச்சக்கரத்தையும், செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போன்ற வெள்ளை விளிசங்கினையும் ஏந்தி இருக்கும் அழகோடு சேர்த்துப் பாடுவதற்கு எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள்.

    Today is the Auspicious day of Vaikunda EgadesiVaikunda Ekadashi!

    In the pond in the backyard of your house. The lily in the ponds have opened, The night flowers have closed, The white toothed sages, Who wear clothes as red as, The powder of brick, Are going to their temples. To sound the conch. You who promised to wake us up, Please wake up, Are you not ashamed, You chatter box, Let us all sing about the lotus eyed one, Who has a holy conch and wheel, In his hands, And worship our Goddess Pavai.

     
    ChandrikaV and vaidehi71 like this.
  10. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL VISHNU7.JPG
    ANDAL HEAVEN.JPG

    மார்கழி மாதம்-15ம் நாள்.
    இன்று துவாதசி.

    திருப்பாவை- பாசுரம் 15

    எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
    சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
    வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
    வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Bagada- Misrachapu.

    பொருள்:

    ""ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

    உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். ""என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

    விளக்கம்:

    ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

    அடியார்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்திருக்கும் கூட்டத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறவள் ஓர் ஆயர்மகள். அப்படிப்பட்டவளை இப் பாசுரத்தில் எழுப்புகிறார்கள் தோழியர்கள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.
    தோழியர்கள் இவளுடைய வீட்டுக்கு வரும்போது, இவள் இனிய குரலில் கண்ணனைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். வந்தவர்கள் வந்த நோக்கத்தை மறந்து இவளுடைய அழகிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்து, "எல்லே இளங்கிளியே!' என்று புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழியர் எழுப்புவது தன் செயலுக்கு இடையூறு என்று நினைத்த அப்பெண் "சில்' என்று அழைக்காதீர்கள்! நங்கைமீர்! இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று சினத்துடன் பதில் கூறினாள்.

    இவள் கூறியதைக் கேட்ட தோழியர், "நீ இவ்வாறு கடுமையாகப் பேசுவாய் என்பது எங்களுக்கு வெகுநாள்களாகவே தெரியும்' என்றார்கள். கடுமையாகப் பேசுவதில் நீங்களே வல்லவர்கள் என்று மிகக் கடுமையாகச் சொன்ன ஆயர்மகள், அடியார்களோடு வாதிடக்கூடாது என்று கூறப்படுவதால் கடுமையைக் குறைத்துக்கொண்டு, "நானே பேச்சில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்' என்று கூறி அடங்கிவிட்டாள். அப்படியாகில் "எங்களோடு சேர்வதைவிட நீ என்ன பெரிய வாய்ப்பை எதிர்பார்க்கிறாய்! விரைவாக வந்துசேர்' என்றார்கள் தோழியர்கள். எல்லாரும் வந்தனரா? என்றாள் படுத்திருப்பவள்.

    வந்துவிட்டனர் நீ வந்து ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக்கொள்! வலிமை மிக்க குவலயாபீடம் என்கிற யானையை அழித்தவனும், பகைவர்களின் பகையை நீக்கவல்லவனும் முதலில் கோபியர்களுக்குத் தோற்று, பிறகு அவர்களைத் தோற்கடிப்பவனுமாகிய மாயனைப் பாட எழுந்துவாராய் என்று அழைக்கிறார்கள்.

    “Hey, little bird, Are you still sleeping? ” “Don’t disturb my sleep , Lasses, I will just come”. “You are good in your speech, We know what you mean.” “You be good, but leave me alone” “Come quickly, why is it different for you?” “Have every one gone?” “Gone, think they have gone” “Please wake up and sing, Of he who killed the big elephant , Of him who can remove enmity from enemies, And of him who is the holy enchanter, And worship our Goddess Pavai.”.

     
    vaidehi71 likes this.

Share This Page