பாரிமுனையில் இருந்து MTC பஸ் கிளம்பிற்று . ஒருவர் இரண்டு கைகளிலும் பெரிய பெரிய பையாக வைத்துக்கொண்டு ஓடி வந்து பஸ்சில் ஏறினார் . இரண்டு பைகளிலும் நிறைய சாமான்கள் இருந்தன . பக்கத்தில் இருந்தவர்களிடம் " இதி சென்ட்ரல் போத்ததா ?" என்று கேட்டார் . அவர்களும் , கோரஸாக ஒரே குரலில் ,"போவுது , போவுது " என்றனர் . அவ்வளவுதான். அந்த மனிதர் அவசர அவசரமாக கைப் பைகளுடன் கீழே இறங்கலானார் . ஒரு பை கீழே விழுந்து அதில் இருந்து பொருட்கள் கீழே சிதறின . நல்ல வேளையாக signal லுக்காக பஸ் நின்றது மட்டும் அல்லாது பக்கத்தில் எந்த வண்டியும் வராதது அவர் செய்த புண்ணியம் . சிக்னல் விழ நேரம் இருந்ததால் இரண்டு பேர் கீழே இறங்கி சிதறி இருந்த பொருட்களை எடுத்துக் கொடுத்து உதவினர் . அவர்கள் இரண்டு பேரும் அவர் எங்கே போக வேண்டும் எனக் கேட்டனர் . அதற்கு அவர் "சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டும் என்றார் . இவர்கள் " அப்புறம் ஏன் இவ்வளவு அலமலப்பாக இறங்கினீர்கள் . இந்த பஸ் சென்ட்ரல் போவுது " என்றார்கள் . " அதனால்தான் இறங்கி விட்டேன் " என்றார் . என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா ? தெலுங்கில் " போது " என்றால் தமிழிலே " போகாது " இன்று அர்த்தம் . இவர்கள் " போவுது " இன்று சொன்னதை அவர் தெலுங்கில் " போது " என்று எடுத்துக் கொண்டார் .
Sir, Lol. Hilarious. I don't know Telugu. Good to see how words can confuse people. Thanks for sharing. Vaidehi
@ksuji maybe you wrote Telugu words in Tamil.. it takes me hours to read Tamil font coz I have to look into Tamil letters book/ page to confirm
Uh TAMIL : POVUDHU meaning "it will go ". TELUGU : PO means " go ". ..... . .and PODHU means " It won't go." Thank you for your response.
@Lathasv I will translate it into English shortly , in my free time . Thank you very much for your response.