சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும். *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும். கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம். மீதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம். மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால், கடவுளுக்கு " *அர்ச்சனை* ". " *வறுமை* " வந்தால் வாடக்கூடாது. " *வசதி* " வந்தால் ஆடக்கூடாது. *வீரன்* சாவதே இல்லை. " *கோழை* " வாழ்வதே இல்லை. தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட. சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள். நீ " *ரசிக்க* " என்னிடம் அழகு இல்லை. ஆனால், நீ " *வசிக்க* " என் இதயத்தில் இடம் இருக்கிறது. மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது". எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்". ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில். ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே. தேவைக்காக கடன் " *வாங்கு* ". கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ". உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது. பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது. " *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான். " *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான். *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை. மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது " *ஆசை* ". ஆனால், அதுக்கு பிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது " *பேராசை* ". " *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை. " *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர். வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால், அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும். *கடனாக* இருந்தாலும்சரி, " *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு. " *செலவு* " போக மீதியை சேமிக்காதே. " *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய். உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி. உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது. கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும். கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு " *புத்திசாலி* " என்பது புரியும். பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ". கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி " *தூற்றும்* ". பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ". அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ". மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ". வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ". கவலைகள் கற்பனையானவை. " *மீதி* " தற்காலிகமானவை. குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான். குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான். அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ". இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* ". வாழைபழம் சாப்பிட்டால் " *சத்து* ". வாழைப்பழ தொலி வழுக்கி விழுந்தால் " *டெத்து* ". விழுதல் என்பது " *வேதனை* ". விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ ". jayasala42