நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட காருண்யபூர்ணநயனே கலசோபிமாலே பத்மாலயே மதுரகோமள வாக்விலாஸே ஸத்பக்தகல்பலதிகே புவனைகவந்த்யே ஸௌந்தர்யவல்லி சரணம் ப்ரபத்யே (ஸௌந்தர்யவல்லி அஷ்டகம்) பொதுப்பொருள்: கருணை ததும்பும் கண்களைஉடையவளே, ஒளி மிகுந்த முத்துமாலையை அணிந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே, வாக்கி னிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத் தக்கவளே, சௌந்தரவல்லித் தாயே, நமஸ்காரம். (இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் திருமகள் திருவருளால் நினைத்தது நிறைவேறி ஐஸ்வர்யம், வியாபார விருத்தி, உத்தியோகத்தில் உயர்வு, சந்தான பாக்யம் என்று அனைத்துவித லாபங்களும் கிடைக்கும்.) பலன் தரும் ஸ்லோகம் : (கல்வி வளம், செல்வ வளம் செழிக்க...) சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்மஸுபூஜிதாம் பத்ம பத்ராய நயநாம் வராபயகரோஜ்வலாம் ஊர்த்வத் வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ரகாம் பத்மாஸனே ஸுகாஸீனாம் பஜேஹம் ஸர்வமங்களாம். (வித்யாலக்ஷ்மி த்யானம்) பொதுப்பொருள்: நான்கு கைகளை உடைய நாயகியே, பேரழகு பொலியும் திருமேனியைக் கொண்டவளே, வலக்கரங்களில் அபய ஹஸ்தமும் தாமரை மலரையும் ஏந்தியருள்பவளே, இடது கரங்களில் வரத ஹஸ்தமும் தாமரை மலரையும் கொண்டவளே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய சதுர்வித புருஷார்த்தங்களையும் தன்னை வணங்குவோர்க்கு அருளி, கல்வி, செல்வ வளம் செழிக்க அருள்பவளே, நமஸ்காரம். (இந்தத் துதியை வரலட்சுமி விரத தினத்தன்று) ஆரம்பித்து ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் கல்வி, செல்வ வளம் செழிக்கும்.) Basuradhu