Sreeja was looking so good in serial, credit to director, cameraman and team... Ipa paka avalo super nu sola mudiyathu ok good than not like meenakshi....... Athuga marriage pani e showing nama etha pesi :spin
DD , saravanan meenakshi .. past 2 weeks ah ithey topic .. Nayantara and Simbu acting together again ?
Nama vijay tv pola aitom araicha mavae again again.....doh1.... vetti than latha madam but athukaga ipadi ya.... nama next topic poganumla apa than padikura people ku orae entertainment varum.. so next as suggested above ideasmileynayan and simbu.......... padam ijn final shoot... but the pair is looking so good.. See VIP trailer nice one........
DD kalyanam sendil sreeja kalyanam differences are there DD's kalyanam we were discussing happyaa aana sendil sreeja naama otitu irukom.gigglingsmiley
Anbartha Vasagegala / Vasagargala - Hot news [h=1]செந்தில்-ஸ்ரீஜா ரகசிய திருமணம்: சீரியல் ஜோடி வாழ்க்கையிலும் இணைந்தது6[/h] சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர்கள் நடிகர் செந்திலும், நடிகை ஸ்ரீஜாவும். அதற்கு முன்பே இருவரும் மதுரை என்ற தொடரில் நடித்தார்கள். அந்த தொடரின் கேரக்டர் பெயர்தான் சரவணன், மீனாட்சி. அதில் இருவரின் காதல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்த தொடருக்கு சரவணன் மீனாட்சி என்றே பெயர் வைத்தனர். சரவணன் மீனாட்சி தொடரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருவரும் ரொமான்ஸ் பண்ணினார்கள். அதனால் இருவருக்குமே நிஜமான காதல் ஏற்பட்டது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதற்கிடையில் ஸ்ரீஜாவுக்கு பதில் இன்னொருவர் சரவணன் மீனாட்சியில் நடிக்க வந்தார். அவருக்கும் செந்திலுக்கும் காதல் என்ற செய்திகள் வந்தது. பின்னர் இருவரும் பிரிந்தார்கள். செந்தில் இப்போது திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அவர் நடித்த பப்பாளி என்ற படம் வருகிற 11ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் செந்திலும் ஸ்ரீஜாவும் ரகசிய திருமணம் செய்து கொண்ட செய்தியும் வெளியாகி இருக்கிறது. கடந்த 4ந் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இதில் இருவரின் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நெருங்கிய நண்பர்களுக்குகூட அழைப்பில்லை. தற்போது இருவரும் கேரளாவில் உள்ள ஸ்ரீஜாவின் வீட்டில் இருக்கிறார்கள். "திருப்பதியில் திருமணத்தை முடித்து விட்டு கேரளாவுக்கு வந்து விட்டோம். பப்பாளி படம் ரிலீசாகுறதால அதுக்கு பிறகு முறைப்படி எல்லோருக்கும் சொல்ல முடிவு பண்ணியிருந்தோம். அதுக்குள்ள லீக் ஆயிடுச்சு" என்கிறார் செந்தில் Tags »
சென்னை, மிர்ச்சி செந்தில் வானொலி தொகுப்பாளராக பணியை தொடங்கி பிரபல் டிவி தொடர் மதுரை தொடர் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் தவமாய் தவமிருந்து, கண்பேசும் வார்த்தைகள்,பப்பாளி உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மதுரை தொடரில் சரவணன் மீனாட்சி தொடரில் செந்தில் ஜோடியாக ஸ்ரீஜா நடித்து வருகிறார். இவர் கேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர். இருவரும் இத் தொடரில் காதலர்களாகவும் திருமண தம்பதிகளாகவும் நடித்தனர். இவர்கள் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் ஆனால் இதை இருவரும் மறுத்து வந்தனர்.’ சரவணன் - மீனாட்சி தொடருக்கு முன்னர் இதே ஜோடி இணைந்து நடித்த 'மதுரை' என்ற தொடரில் இவர்களின் கதாபாத்திரப் பெயர்தான் சரவணன் மீனாட்சி. அதன்பின்னர் அந்த பெயர்களையே தலைப்பாக வைத்து ஒரு தொடர் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் தொலைக்காட்சி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தத் தொடரில் இவர்கள் தத்ரூபமாக நடித்தபோதே பல ரசிகர்கள் உண்மையிலேயே இவர்கள் தம்பதிகள்தான் என நினைத்தனர். தற்போது அது நிஜமாகிவிட்டது. இந்த நிலையில் திருப்தி கோவிலில் திடீர் என்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் மிர்ச்சி செந்தில் கூறும் போது. சரவணன் மீனாட்சி தொடரில் இருவருமே தம்பதிகளாக நடித்தோம். ஒரு கட்டத்தில் நண்பர்கள் நீங்கள் இருவரும் நிஜ மாகவே திருமணம் செய்து கொள்ளலாமே என வற்புறுத்தினர். நாங்களும் அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தோம். இறுதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். திருப்தி கோவிலில் எளிமையாக எங்கள் திருமணம் நடந்தது. திருவல்லாவில் திருமண வரவேற்பை முடித்தோம். சம்பிரதாய நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து விட்டு திருமணம் நடந்ததை முறைப்படி அறிவிக்கலாம் என்று நினைத்து இருந்தோம். அதற்குள் பேஸ்புக், டுவிட்டரில் திருமண போட்டோக்கள் வந்துவிட்டன. மகிழ்ச்சியுடன் திருமணம் நடந்த தகவலை தற்போது வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். Thathi news .............