திருமண பாக்யம் பெற... ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் ஸ்தோத்ர மாலையில் இருந்து எடுக்கப்பட்டது இந்த மந்திரம் - தினமும் காலையில் நீராடி திருவிளக்கேற்றி, ஸ்ரீராமரின் பாதுகையை மனத்திற்குள் தியானித்து, பக்தியுடன் சொல்ல மனதிற்கேற்ற வரன் அமைந்து சீக்கிரம் விவாகம் நடக்கும். மந்திரம்: சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம் கண்டேஷு வைகுண்டதீபம் வராணாம் I பத்நாஸி நுநம் மணிபாதரட்கேஷ மங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை II" விளக்கம்: ஓ, ரத்தினப் பாதுகையே! சுபமான நாதங்களை உடைய நீ, உன்னிடம் அமைந்துள்ள ரத்தினங்களின் கிரணத் தொகுதியால் பகவானாகிற பதியை மணக்கின்ற சுருதிகளின் கழுத்துகளில் திருமாங்கல்யத்தைக் கட்டுகின்றாய் போலும்." மிக உயர்ந்த இந்த மந்திரத்தைச் சொல்லி வாசகியர் அனைவரும் பயன்பெறப் பிரார்த்திக்கிறேன். :bowdown - மாலதி நாராயணன், பெங்களூரு - 55 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Good suggestion by the great man. It is worth following. "bharathymanian"