Vinu chakravarthy passes away today. The news says " Vinu Chakravarthy (71), the man who introduced ‘Silk’ Smitha to Tamil film industry is no more. " --> Apparently this is what he's now known for.
Sarchai Nadigai is probably Nayanthara. Isn't she known as the Lady Superstar? But which movie of hers flopped so bad? Dora? I watched the film...not amazing but not bad either. In contrast, I thought Trisha's Nadigai was reaaaaallly bad. If Trisha appeared fine with it, why is Nayan freaking out? Slim Nadigai...my guess is Thamanna. She's the one who is rumored to be dating thaadi nadanum Prabhu Deva. Pickup drop nadigar is Arya. Currently dating Catherine Tresa, his costar from Kadamban
This is so sad. He was not feeling well for quite some time I believe. His coarse voice and mannerism will always remain unique and memorable. I loved him in Guru Sishyan. His comedy timing with Rajini and Manorama was just fabulous!
mangalakaramana nadigai Lakshimenon!! நடிகைகள் கெஞ்சினால் நல்ல பாம்பு என்ன…, நாக்கு பூச்சிக்கூட படம் எடுக்கும். ஆனால் அப்படியொரு அழகு நடிகை கெஞ்சிய பின்பும், செய்வதறியாது கையை பிசைந்து நின்றிருக்கிறார் உதயநிதி. அட இதென்னங்க அநியாயம்? சரவணன் இருக்க பயமேன் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. கொளுத்துகிற வெயிலாம் அங்கே. கொடுமை என்னவென்றால், இந்தப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்கி வரும் எஸ்.எழில், ஒரு ஆட்டோ சைஸ் கேரவேனுக்குக் கூட ஏற்பாடு செய்யவில்லை. அதற்கு பதிலாக, ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே ஒதுங்கிக் கொள்ள கொஞ்சம் நிழலுக்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஸ்பாட்டுக்கு போய் இறங்கிய சிருஷ்டி, கேரவேன் எங்கே என்றுதான் முதலில் தேடினாராம். செம ஷாக். கேரவேன் வராதும்மா என்று கூறியிருக்கிறார்கள். பதறியடித்த சிருஷ்டி, “சார்… இந்த வெயில்ல கேரவேன் இல்லாம எப்படி சார்?” என்று படத்தின் ஹீரோ உதயநிதியிடம் கெஞ்ச, அவரோ டைரக்டர் எஸ்.எழிலிடம் கேட்டிருக்கிறார். “சார் நம்ப பட்ஜெட்ல அதுக்கெல்லாம் வழியில்ல. அட்ஜஸ்ட் பண்ணிட்டு நடிக்க சொல்லுங்க” என்று கூறிவிட்டாராம் ஈவிரக்கம் இல்லாமல். உதயநிதி விரலசைத்தால், உடன்பிறப்புகள் கூட்டம் கடலென திரள்கிற அளவுக்கு தெம்பு இருந்தும், ஒரு துக்கடா கேரவேனுக்கு வழியேற்படுத்தி தராமல் அமைதிகாத்துவிட்டாராம் அவர். அப்புறம்? கரண்ட் இல்லாத பிரிட்ஜுக்குள், புழுங்கி புழுங்கி வதங்கிப் போனது முள்ளங்கி பத்தை!
தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் இருக்கிற இடைவெளி புரியாதவர்கள்தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் அந்நிறுவன முதலாளி எஸ்.எஸ்.சரவணன் இமேஜ் மீது சேறு வாரி பூசுவார்கள். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. தானுண்டு, தன் நம்பிக்கை உண்டு என்று நாள்தோறும் புதுப் புது ஸ்டெப்புகளை பழகி வருகிறார். விட்டால், டான்ஸ் மாஸ்டர்கள் தினேஷ், லாரன்ஸ் மாதிரி திறமைசாலிகளுக்கே தின் பண்டம் கொடுப்பார் போலிருக்கிறது. அந்தளவுக்கு ஸ்டெப்புகளில் தெறிக்கிறது வித்தை. இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்க வந்துவிடுவாரோ என்கிற அச்சம், அவரது லேட்டஸ்ட் விளம்பரத்தை பார்த்த நாளிலிருந்தே நாட்டில் நிலவி வருவதையும் மறுக்க முடியாது. இத்தனைக்கும் “எனக்கு சினிமாவில் நடிக்கறதுல விருப்பம் இல்லே” என்று கூறியவர், “எனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை நான் கூப்பிடவில்லை’ என்றும் தெரிவித்துவிட்டார். இந்த நயன்தாரா பஞ்சாயத்து இருக்கட்டும்… அவருடன் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னாவுக்குதான் கடும் வருத்தமாம். நடிக்க வர்றதா முடிவு பண்ற நேரத்தில், அவர் மனசுக்குள் ஏன் நயன்தாரா வரணும். இமேஜ் பார்க்காமல் அவருடன் ஆடிய நாமல்லவா வந்திருக்க வேண்டும் என்றும் கேட்கிறாராம். கடைசியாக ஒரு கன்குளுஷனுக்கு வந்திருக்கிறார் டான்ஸ் இளவரசன் எஸ்.எஸ்.சரவணன். அதென்னவாம்? நடித்துவிடுவது என்பதுதான் அந்த கன்குளூஷன். அந்த விளம்பரத்தை கேலி செய்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது போல அமைந்துள்ளதாம் விரைவில் வரப்போகும் அடுத்த விளம்பரம். அதில், தமன்னா எஸ்.எஸ்.சரவணனை பார்த்துச் சொல்லும் முதல் டயலாக்கே “வாங்க ஹீரோ” என்பதுதானாம். சுனாமிக்கே சூட்டுக்கோல் போட்டவய்ங்க நாங்க… எங்களுக்கேவா?