ஏர் படத்தின் கதை ஒரு கொரியன் சீரியலின் காப்பி என்று வந்த செய்தியை மறைக்கும் விதமாக அந்த படம் ஒரு உண்மைக் கதை என்று பிரஸ் ரிலீஸ் அனுப்பியது படக்குழு. லெஜண்ட் இயக்குநர் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஏர் படம் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றியது. அது மட்டுமல்லாமல் படம் ஒரு கொரியன் சீரியலின் அப்பட்டமான காப்பி என்று ஆதாரங்களுடன் செய்தி வர கலங்கிப் போய்விட்டதாம் படக்குழு. இதற்கிடையே யாரோ ஒரு புண்ணியவான் 'இது கார்கில் வீரர் ஒருவரின் சொந்தக் கதை' என்று சமூக வலைதளத்தில் எழுதினார். உடனே அப்பாடா... ஒரு நல்ல பாய்ண்ட் கிடைத்தது என்று அதையே பிரஸ் ரிலீஸாக்கி அனுப்பி விட்டார்களாம்
பெயரிலேயே போதை வைத்திருக்கும் காமெடியன் அவர்... சொந்தப் படம் எடுத்து கடனாளியாக ஓவர் குடியாகி கிட்டத்தட்ட மன நோயாளி லெவலுக்கே போய் விட்டார். இப்போதுதான் கனியான இயக்குநர் தன் படத்தில் ரீ எண்ட்ரியோடு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் விழாவுக்கு நடிகரை அறிமுகப்படுத்திய இயக்குநர் வந்திருந்தார். மேடையிலேயே நடிகருக்கு 'ஏன்டா சொந்தப் படம் எடுத்த...' என்று புத்திமதி சொன்னவர் மேடைக்கு கீழேயும் ஒரு புத்திமதி சொல்லியிருக்கிறார். அது 'பகல்ல குடிச்சா சினிமாக்காரன் அழிஞ்சுடுவான். அதை முதல்ல நிறுத்து' என்று சொல்லியிருக்கிறார். காமெடியனும் 'சரிண்ணே'... என்று தலையாட்டி இருக்கிறார். கடைபிடிக்கிறாரா என்று பார்ப்போம். R
Last week it was confirmed that the long the work on long delayed 'Viswaroopam2' the sequel to Kamal Haasan's 2013 blockbuster 'Viswaroopam' has been resumed. The dubbing work has started and the music director Ghibran has started working on the re-recording for the film. Now none other than the film's director and lead actor Kamal Haasan has come up with the big announcement that his Raaj Kamal Films Internatinational has taken up the film from Producer Ascar V. Ravichandran the initial producer of the sequel. The Ulaganayagan also confirmed that he has taken up the responsibility to release 'V2' within the end of the calendar year 2017. That's a fantastic news for every Kamal fan and Tamil movie buff. The four year wait is finally going to come to an end within a few months from now. 'Viswaroopam' released on February 7, 2013 after facing so many issues and it was twice banned by the Government as some Islamic organisations alleged that the film showed the religion in bad light. The film was finally released in Tamil Nadu after Kamal accepted to cut certain shots and sounds from the film, We hope 'V2' does not face any such problems and it gets a smooth release in Tamil Nadu as well as other parts of the state.
தெலுங்கு உட்பட தற்போது அநீதி கதைகள், விஜய்-61, இரும்புத்திரை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் சமந்தா. அஞ்சான் படத்தில் கவர்ச்சியில் வந்த சமந்தா, அதை எல்லாம் நிறுத்தி விட்டு தற்போது நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்துள்ளாராம். அந்த வகையில் தற்போது மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இரும்புத்திரை படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் காமெடி நன்றாக உள்ளது என பலர் கூறவே தற்போது கவர்ச்சிக்கு நோ கூறிவிட்டு, இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கும் ஓரளவு முன்னுரிமை கொடுக்கப்போவதாக கூறியுள்ளாராம் சமந்தா.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ என்ற திகில் தொடரை நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. தயாரித்து இயக்கி வருகிறார். பாம்பு, பேய், ஆவி, செய்வினைகள் நிறைந்த இந்த சீரியல் தினசரி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும், இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், “ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டார் இயக்குநர் சுந்தர் சி. நந்தினி என்னோட கதை. இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினைனா அதை நான் பாத்துக்கிறேன். உங்க குடும்பத்துக்கு தேவையானதை நான் செய்கிறேன் என்று சொன்னார, ஆரம்பத்தில் சில பணம் கொடுத்தது உண்மை தான், ஆனால் அதன் பிறகு கேட்டால் கோபமாக பேசி என்னை தட்டி கழிக்க பார்க்கிறார். வேலை செய்ததுக்குத்தான் பணம் கேட்கிறோம்.கடவுள் உங்களுக்கு எல்லா தண்டனையும் கொடுப்பான். நந்தினி என் கதைன்னு உங்க வாயால சொல்ல வைப்பான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் எடுத்த 90சதவீதம் படங்கள் மற்ற மொழிகளின் காப்பி தான், அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்,
ஒரே படம் தன்னை குப்புறக் கவிழ்த்துவிடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் சர்ச்சை நடிகை. லேடி சூப்பர் ஸ்டாராக தன்னை அறிவித்துக்கொண்டு கட்டவுட்லாம் வைத்துக்கொண்டவர் படம் படுதோல்வி அடையவே தனது அடுத்த படத்தை வியாபாரம் செய்யவே முடியாமல் தவிக்கிறாராம். ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் படம் சொந்த படம் வேறு. ஃபைனான்ஸ் வாங்கி மேனேஜர் பெயரை போட்டு, தானேதான் எடுத்தார். வட்டி கட்ட முடியாமல் குறைந்த விலைக்காவது சீக்கிரம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். இன்னொரு புறம் மார்க்கெட் வீழ்ச்சியடைந்து, கவர்ச்சியும் போனதால் அடுத்து படம் கிடைப்பதும் கஷ்டம். எனவே சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு சலுகைகளை அள்ளி விடலாமா என்றும் யோசிக்கிறாராம். அனேகமாக இந்த படத்துக்கே புரமோஷனுக்கு வந்து பேட்டியெல்லாம் கொடுத்தால்தான் ஓட வைக்க முடியும்... ஆடாத ஆட்டமெல்லாம்...!
சென்னை: வாரிசு நடிகை பணமும், பெயரும் புகழும் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உள்ளாரம். வாரிசு நடிகை கோலிவுட்டில் விறு விறுவென வளர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார். சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவுடன் உள்ளார்.இந்நிலையில் தாயின் கட்டளைப்படி தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். அங்கு மட்டும் கவர்ச்சி காட்டுகிறார், சூப்பர் சீனியர் ஹீரோக்களாக இருந்தாலும் சிரித்தபடியே ஜோடியாக நடிக்கிறார். அவரும் கொள்கைகளை தளர்த்தி நடிக்க ரெடியாக இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் அம்மணிக்கு வாய்ப்பு அவ்வளவாக வருவது இல்லை. தற்போது கிடைத்துள்ள படத்தில் இன்னொரு ஹீரோயினும் உள்ளார். பணம், பணம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகை. பணமும்,புகழும் தான் முக்கியம் என்று நினைத்து வேலை செய்து வருகிறார்