மனைவி செத்துப் போகிறபோது கணவனிடம் ,எனக்குப் பிறகு இன்னொருத்தியோடு நீ வாழ்வதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படி ஏதாவது முயன்றால் ஆவியாக வந்து உனக்குத் தொல்லை கொடுப்பேன்" என்று சொல்லி விட்டு இறந்து விட்டாள் .கணவன் மூன்று மாதத்துக்கு சத்யம் தவறாமல் இருந்தான். ஆனால் சீக்கிரமே ஒரு அழகான பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. அன்றிலிருந்து தினமும் ஆவி வர ஆரம்பித்தது. அவன் அந்த பெண்ணுடன் பேசினது,எந்த இடத்தில் சந்த்தித்தது,எல்லாம் விலா வாரியாக சொன்னது. நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் ஒரு குருவிடம் அனுப்பினர். அவன் குருவிடம் எல்லா விவரமும் சொன்னான். " சரிதான்.ரொம்ப சாதுர்யமான ஆவிதான்.ஒரு காரியம் செய்.இன்றைக்கு ஆவி வரும்போது ஒரு பை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக் கொண்டு போய் 'இதில் எவ்வளவு புளியங்கொட்டைகள் இருக்கின்றன என்று கேள்.இதற்கு சரியான பதிலை ஆவி சொல்லாவிட்டால் இனி ஆவி உன்னைத் தொந்தரவு செய்யாது" என்கிறார் குரு. அன்றைக்கும் ஆவி வந்தது. என்ன ஒரு குருவிடம் யோசனை எல்லாம் கேட்டாய் போலிருக்கிறதே?" என்றது. " இவ்வளவு தெரிந்து வைத்துள்ள நீ இந்த பையில் எத்தனை புளியங்கொட்டை இருக்கிறது என்று சொல்லேன் என்று வாரினான் . ஆவியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதற்கப்புறம் அது வரவும் இல்லை. இது என்ன? ஆவிகளும் கணக்கில் weak என்பது தான் நீதியா? இல்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஆவிக்குத் தெரிந்திருக்கிறது.அவனுக்குத் தெரியாதது ஆவிக்கும் தெரியவில்லை. அப்படியானால் ஆவி என்பது அவனுடைய மன பிரமை.Illusion . இதை நேரடியாகச் சொன்னால் அவன் நம்பப் போவதில்லை.இனி வராது என்று மனப் பூர்வமாக நம்பியபோது மனா பிரேமையிலிருந்து விடுபட முடிந்தது. கிராமங்களில் பேய் ஓட்டுவது கூட இந்த மாதிரி 'make believe 'ரகம் தான். Now it has become a fashion to introduce ghost characters in all the TV serials. jayasala42