Padmashri Dr.Mohan Kameswaran-Famous ENT specialist in Chennai says: "காதை நீங்கள் குடையவில்லை என்றால் அரிப்பு வராது. மனித உடம்பிலேயே தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளக்கூடிய ஒரே உறுப்பு காதுதான். காதில் அழுக்கு சேருகிறது என்பது ஒரு தவறான விஷயம். எப்படி மனித உடம்பில் வேர்வையும் கண்ணீரும் சுரக்கிறதோ அதேபோல் காதில் சுரக்கும் விஷயத்தைத்தான் நாம் அழுக்கு என்று கூறுகிறோம். இது சுரப்பதே நம்முடைய காது ஜவ்வைப் பாதுகாக்கத்தான். நாம் பட்ஸ் பயன்படுத்தி இதை சுத்தம் செய்ய முயற்சி செய்யும்போது தானாக வெளியில் வரவேண்டியது, நாம் உள்ளே தள்ளிவிடுகிறோம். இது கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து காதிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வெளிக்காதில் உள்ள தோல், கண் இமையைப் போல மென்மையானது. நாம் பட்ஸ் பயன்படுத்தும்போது, அந்தத் தோல் உறிந்துவிடும். அது திரும்பவும் வளரும்போது அரிப்பு ஏற்படுத்தும். அந்தச் சமயத்தில் நாம் திரும்பவும் பட்ஸ் பயன்படுத்தினால் புண் ஏற்பட்டு செவிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு என்னவென்றால், காதிற்கு அருகில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கையை கொண்டு செல்லாமல் இருப்பதுதான். எண்ணெய் விட்டால் காது சுத்தமாகும் என்பதும் தவறான நம்பிக்கை. பட்ஸினால் பயன் பெறுபவர் இரண்டே பேர். ஒருவர் அதை விற்பவர்; மற்றவர் என்னைப் போன்ற காது மருத்துவர்." jayasala 42