ஸாயி துனி அணையாது எரிகின்ற துனியிங்கு கண்டேன் அதன்முன்னே கைகூப்பி நின்றேனடா பிணியாவும் தடுத்தாளும் உதியிங்கு கண்டேன் பாபாவின் அருளெண்ணி சிலிர்தேனடா (அணையாது எரிகின்ற...) பாபாவின் தர்பாரில் இருள் இல்லையே பக்தர்தம் நெஞ்சத்தில் மருள் இல்லையே ஆபத்து காலத்தில் ஓடோடி வருவான் அவனன்றி நமக்கிங்கு புகல் இல்லையே (அணையாது எரிகின்ற...) பதினோரு வசனங்கள் கீதை என பாபாவின் சத்சரிதம் பாதை என எதுகண்டும் அஞ்சாது நாம் வாழுவோம் அவனுண்டு நமக்கென்று நாம் காணுவோம் (அணையாது எரிகின்ற...) வீயார்