தேவையான பொருட்கள்:- `````````````````````` வெங்காயம்-1/2 கிலோ தக்காளி -1/2 கிலோ பனீர் -1/4 கிலோ இஞ்சி -1 துண்டு பூண்டு -2 டீஸ்பூன் (பொடியாகஅரிந்தது) வெண்ணை -50 கிராம் எண்ணெய் - 1/4 கப் தயிர் -1/2 கப் கொத்தமல்லி -1 கட்டு மிளகாய்தூள் -4 டீஸ்பூன் மல்லித்தூள் -3 டீஸ்பூன் கரம்மசாலா -2 டீஸ்பூன் சீரகப்பொடி -1 டீஸ்பூன் ஏலக்காய்,பட்டை, கிராம்பு (வறுத்து பொடித்து)-1/2டீஸ்பூன் விழுதாகஅரைக்க:- ```````````````` முந்திரிப்பருப்பு - 50 கிராம் . கசகசா. -25 கிராம் வெள்ளரிவிதை -1 டீஸ்பூன் ( நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்) செய்முறை:- `````````` (1) வெங்காயத்தை நீளவாட்டில் அரிந்துக் கொள்ளவும். 2 டேபிள்ஸபூன் எண்ணெய் அல்லது வெண்ணையில் பொன்னிறாக வறுத்து அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் தக்காளி, இஞ்சி இவைகளைத் துண்டாக்கி எண்ணையில் வதக்கி மிக்ஸியில் அரைத்து ரெடியாக வைத்துக் கொள்ளவும். (2)வாணலியில் வெண்ணையையும், எண்ணெயையும் சூடாக்கி, அரைத்த வெங்காய விழுதைப் போடவும். அதனுடன பொடியாக அரிந்த பூண்டையும் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். (3) டார்க் ப்ரெளன் கலர் வந்தவுடன் ,கசகசா, முந்திரிபருப்பு விழுதைச் சேர்த்து கொதிதது சிவப்பு கலர் வரும் வரை கிளறவும். இப்போது மசாலாப் பொடிகளை சேர்த்து மறுபடியும் கிளறவும். (4) தயிர் சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியில் சிறிது தண்ணீர் சேர்த்து துண்டாக நறுக்கி வைத்த பனீர் துண்டுகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும் (5) கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.
dear csk unnkal receipe kavitai polla nallave irruvu. kadaiziyil yeludiya vartaikal kavitai vida nallave irruku. so ungal receipie and manipu ketkuum vidam arummaiyo arummai. (tamil padika mattum tan teriyum eluda teriyadu so ennayum mannikavum)