சொன்னாலும் கேட்பதில்லை இந்த மனது!- 8 குடையொன்றை பிடித்து பார்த்தேன்.. ஐஸ்க்ரீமில் குளித்துப் பார்த்தேன்.. இளநீரில் அமிழ்ந்து பார்த்தேன்.. ப்ரிட்ஜுக்குள் அமர்ந்து பார்த்தேன்.. இரங்கினாள் இயற்கை அன்னை - தணிந்தது கோடை வெப்பம்! இரங்கினால் குறைந்தா போவாய்..?? தகிக்கிறதுன் கோபவெப்பம்!
அதிதி அவர்களே....!!! நன்றாக இருந்தது.....வாழ்த்துக்கள்...:thumbsup கடைசி இரண்டு வரிகளை படிக்கும் போது எனக்கு இப்படி சொல்ல தோன்றுகிறது.. வெப்பத்தின் கோபம் பெண்களின் கோபத்தை போன்று சீக்கிரம் தணிந்து விடும்...... இப்படிக்கு நந்தம்
thalaiyai kudaindhu parththen, kangal vizhiththu parththen penavai udaiththu parthen unpol kavidhai ezudha enakku en varavillai? un varththai jalam arumai. with love pad.
பத்மினி உங்கள் கேள்வியே கவிதையாய் இருக்கு.. பின்பு கவிதை வரவில்லை என்ற ஐய்யம் எதற்கு... பொதுவாக பெண்களை கவிதையாக வடிப்பர்... ஆனால் இங்கோ அவர்களே கவிதை வடிக்கிறார்கள்.. ஓ இது தான் புது கவிதையோ....:bowdown இப்படிக்கு நந்தம் :coffee
நந்தம் அவர்களே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. பெண்களின் கோபம் தான் சீக்கிரம் தணியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் கோபத்தின் காரணத்தைப் பொறுத்தே அது எப்போது/ எப்படி தணியும் என்று சொல்லமுடியும், இல்லையா?