விளக்கு நிறைய எண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு எண்ணையில் மூழ்க விட்டு திரியை விளக்கின் உள் இழுத்து ஏற்றும் தீபம் நின்று எரியும் நீண்ட நேரம் எல்லாம் தெரிந்திருந்தாலும் எப்போதும் வெளி காட்டினால் பகிர்வதற்கு ஆள் இல்லாமல் பஞ்சு போல் பறந்து விடுவோம் எண்ணையில் மூழ்கி எரியும் தீபமும் எண்ணங்களை உள்கொண்டு வாழும் மனிதனும் நீண்ட அமைதியுடன் நிலைத்து நிற்பர் நெடு நேரம்