ஆயாசங்களால் வேயப்பட்ட என் மனக்கூரையில் எங்கிருந்தோ வந்தமர்ந்த குயில்ராகம் பொழியும் மௌனத்தை வழித்தெடுத்துப் பிழியும் இராகம் அதன் சாறிரங்கி இதயமெங்கிலும் வழியும் சற்றேக் கூர்ந்திடிலோ செவிவழியேப் பேரமைதி சுற்றியெங்கும் பொங்கவிரு கைத்தாளம் போடும் மற்றசைவு நிறுத்தியிரு காலாட்டம் தொடங்கும் ஆட்டம் பாட்டமது தொடங்கியதை அறியாது ஓட்டமாக ஓடிவந்து சடலமென்று பெயரிட்டு உற்றார் உறவெல்லாம் கூடி வழியனுப்பவென்று போட்டுடைத்த மட்பாண்டம் பார்க்காமல் திரும்ப இடுகாட்டுக் குழிவெட்டி நிலையாமையைத் தழுவ விடுபட்ட உயிர்க்கூட்டை விடைகொடுத்து அனுப்ப நெடுநேரம் விழித்தருகில் சிலையமர்ந்த உன்னைத் தொடுந்தொலைவில் இல்லாத என் விருப்பமெல்லாம் விரற்கடைப் புன்னகை இரு துளி கண்ணீர் ! Regards, Pavithra
பவித்ரா என்னம்மா இது .காலைல இருந்து ஒன்னும் சரி இல்லையே.கண்ணீர் விட்டு சுமையை இறக்கி விடுங்கள் .மனம் லேசாகி விடும்
ஒன்றும் வருத்தமில்லை பெரியம்மா ! கவலைப்படாதீர்கள் ! சில நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது, அதுவே வார்த்தையில் வந்தது. அவ்வளவே ! எல்லாம் சுகமே ! என் மீதான உங்கள் மாறாத அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி !