வந்தது சந்தோஷம்! தன் வீடு பளிச்சென்று இருக்க விரும்பும் மூதாட்டி, தன் சக்திக்கு மீறிப் பாடுபடுவார், தினந்தோறும்! விடுமுறையில் பேத்தி வரும் சமயங்களில், தான் படுவதைச் சொல்லிச் சொல்லியே, புலம்பிடுவார்! வேலை ஆட்கள் எத்தனை சுத்தம் செய்தாலும்கூட, வேளை தவறாமல், தானும் சுத்தம் செய்திருப்பார். இங்கு அழுக்கு, அங்கு தூசி என்றே சொல்லியபடி, இங்குமங்கும் உலவுவார், கண்ணாடி அணிந்தபடி! எப்படிப் பாட்டியைச் சிரிக்க வைப்பதென அறியாது, எப்படியெல்லாமோ முயன்று, பேத்தி தோற்றாள்! சிரிப்பதையே மறப்பாளோ பாட்டி என்று, அவளும், சிரிக்க வைக்கும் உபாயத்தையே தேடி இருந்தாள்! ஆண்டு ஒன்று இவ்வாறே பறந்துவிட, அதன் பின், ஆண்டு விடுமுறையில், அவரை மீண்டும் பார்க்க, பேத்தி வர, பாட்டி மிக்க மகிழ்ச்சியிலே திளைக்க, பேத்திக்கு, பாட்டியின் நல்ல மாற்றத்தைக் கண்டு, ஒருபுறம் மகிழ்ச்சி வந்து மனதை நிறைந்தாலும், மறுபுறம் புரியாத புதிராகவே இருக்க, கேட்டாள், 'இப்போ சந்தோஷமா இருக்கியே, பாட்டி!' பதில்: 'இப்போ நான் கண்ணாடியே போடறது இல்லை!' :biglaugh ... :biglaugh
Hai rr, If the paatti will wear specs then only she can find the dust and faults of the cleaner. Good she changed and made her grand daughter happy. very nice poetic lines with sense of humour a lot
Very nice one Raji mam.... edhayum uthu paatha adhula irukkura kurai theriyum.... adhai vittutu, sandhoshama irukka pazhagikkanum... simple-a sonneenga... super.... ilt
Dear Tulips, I know a granny who always has a magnifying glass (!) to find fault with everything on earth!! Glad that you like the poem.. Raji Ram :thumbsup