குமிழும் வெட்கம் அலையாய் பெருகுது. யாரவன் கள்வன்? அகம் நொந்தாலும் முகம் மாறவில்லையே! அன்னை மனசு! மலர் மணமும் கொள்பருவம் வருமோ மறுபடியும்? என்ன முயன்றும் எல்லோரும் அறிந்தாரே எப்படி? சொல்லேன்! இருக்கும் வரை நெஞ்சமெல்லாம் நிறையும். மீண்டும் தாய் வீடு! உன் போன்றே நானும்! மலர்வேன், அவருக்கே! அதுவே சரி! சூடாமலர்கள் பின்னர் வருந்திடுமோ? பேதையின் கேள்வி! எண்ணத்தில் எங்கோ என்றைக்கும் வாடாமலே இனிக்கும் காதல்!