கேடிகள் போலக் காரியங்கள் புரிந்ததால் கோடிகள் சேர்த்து, எப்படியோ ஒரு நாள் பிடிபட்டு, பதினைந்து திங்கள் சிறையில் அடைபட்டு, 'பெயிலிலே' வெளி வந்தவர், நேராகச் செல்லுகின்றார், பாரளுமன்றம்! தேறாத இந்த மனிதர்களை கௌரவிக்க, வீடியோ கலைஞர்கள் ஓடுகின்றார், அந்த வீர மனிதரைப் படம் பிடித்து, ஒளிபரப்ப! தொலைக்காட்சி நிலையங்களும், தத்தம் அலைவரிசையில் காட்ட முந்துகின்றார்! பாருக்குள் நல்ல நாடு என்ற நாட்டினிலே, யாருக்கும் வெட்கம் இல்லாது போனதே! :hide:
ஆம் சகோதரி! இது நூறு சதவிகிதம் உண்மை!-- இங்கு- ”பாருக்குள் நல்ல நாடு என்ற நாட்டினிலே, யாருக்கும் வெட்கம் இல்லாது போனதே “- மிக வருந்த தக்கது...