முருங்கை மரம் உறுதித் தன்மையில்லாத மரம். அது எளிதாக முறிந்து விழுந்துவிடும். அது எத்தனை தான் வளர்ந்தாலும் அவை தூணுக்கு ஏற்ற உறுதியைப் பெறாது. எனவே முருங்கை மரத்தை அடிக்கடி முறித்துவிடுவார்கள், அதனால் நல்ல துளிர் விட்டு வளர்ந்து கீரையைக்கொடுக்கும்.
முருங்கை தனது குறை நிறைகளை அறிந்து குறையை பற்றி கவலை படாமல், நிறையான கீரை, காய்களை நிறையவே தருகிறது...... நாம் நம்மிடமும், நம்மை சுற்றி உள்ளவர்களிடமும் உள்ள நிறை குறைகளை நிருத்து, அதற்கேற்ப பழகினால் நிறைவாய் வாழலாம்......