மனதை மயக்கும் மாலையில் அந்தி சாய்ந்த வேளையில் மலர்கள் பல மலர்ந்திருந்த சோலையில் காத்திருந்தேன் கண்ணம்மாவுக்காக என் வாழ்வை வண்ணமயமாக்க வருவாள் என்று..... வந்தாள் அன்னம் போல நடை பயின்று என் அருகே வந்து அமர்ந்து தன் குயிலினும் இனிய குரலால் மழலையாய் ஏதோ மிளற்றினால்.. எனது உறைந்த பார்வையோ அவளது எழில் கொஞ்சும் முகத்தில் .. மூன்றாம் பிறை போன்ற நெற்றி... அதில் நல்ல சிவப்பில் திலகம் .... காதளவோடிய அகன்ற நயனங்கள் .. அழகிய, அளவான, கூர் நாசி.... ஆப்பிளுடன் ஒப்புமை சொல்ல வேண்டிய கன்னங்கள்... கோவை பழத்துடன் போட்டி போடும் செவ்விதழ்கள்.. இத்தைனையும் நான் ரசித்திருக்க, அவள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல் போகவே என்னை அழைத்து, அதற்கும் பதில் இல்லாததால், செல்லமாக என்னை குட்டினாள்... ஆஹா, என்னே மிருதுவான கைகள் .... ஆனால் எனக்கு ஏன் இவ்வளவு வலி... முகம் சுருக்கி, கண் விழித்து பார்த்தால் அருகில் இருந்தது என் அன்னை... அவள் கையில் இருந்ததோ பூரிக்கட்டை ....
Hiyaaaaa innaikum Viji Maa thaan first. Thangal anbukku nandrigal pala amma. Enathu kavithai padiththu karuththu sonna thangal nalla ullaththukku endrendum nandri sollvathu en kadamai
கண்ணம்மா மீது கொண்ட காதலால், உருவான கற்பனை மிக அருமை, வேணி. அன்னையின் மிருதுவான பூரியினை, இடும் பணியில் உதவாத உங்களின், கற்பனை, நாளும் எங்களுக்கு மிருதுவான கவிதைகளை தருவதில் மகிழ்ச்சியே.
அன்புள்ள நட்புக்கு, அன்னை இடும் பூரிகள் என்னவோ மிகவும் மிருதுவானவைதான், ஆனால் அவள் அடித்த அடி அப்பப்பா என்ன வலி, என்ன வலி, கண்ணம்மா அழைத்தாள் என்று நான் நினைத்து தவறு, அப்போதிருந்தே அழைத்தது அன்னை தான் போலும். பாவம் அவளும் என்னதான் செய்வாள்? எனது கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு நன்றிகள் பல பல.
நீங்கள் என்ன பகல் கனவா கண்டீர்கள்??? நீங்கள் விவரித்து கண்டு நேரிலே கண்டதை உங்கள் கவி வழி சொன்னீர்கள் என்றல்லவா நினைத்தேன்!!!! ஆரம்பம் முதல் கடைசி பத்தி வரை ஆனந்தம் கடைசி பத்தியில் பேரானந்தம் :biglaugh:biglaugh:biglaugh:biglaugh
:rotfl:rotfl:rotfl boorikattai la adivaanguna anubavam ungalukku irukku nu sollave illaye......... nice veni:thumbsup