விளை நிலங்கள் விலை நிலங்கள் உழுவதற்கு நிலம் இல்லை உண்பதற்கு உணவு இல்லை வெந்தும் வேகாத உணவை விலை கொடுத்து வாங்கி உடல் நலனை கெடுத்து உறக்கம் இன்றி தவித்து விலை கொடுத்து வாங்கிய நோயை விலை கொடுத்து நீக்குகிறோம் என்ன கொடுமை இது இதுவே இன்றைய வாழ்க்கை நிலை ஒரு நூறு தானியங்கள் விதைத்தால் பல ஆயிரம் தானியங்கள் தருவாள் நம் பூமி அன்னை பொன்னில் போடும் செல்வத்தை மண்ணில் போட்டால் தலைமுறைகள் செழிக்கும் தலை நிமிர்ந்து நிற்கும் பரம்பரைக்கு நோய் தவிர்த்து பாரம்பரியம் கொடுத்து அளவற்ற செல்வமும் ஆரோக்கியமான வாழ்வும் சீதனமாக தந்து நீடூழி வாழ வழி வகுப்பது மானிடரின் தலையாய கடமை
தமிழ்நாட்டில் பொங்கலை உழவர் திருநாள் என்று சொல்கிறோம் .ஆனால் உழவுத்தொழிலை மறந்து விட்டோம் .அந்த ஆதங்கத்தில் வந்ததே இந்த வரிகள் .நன்றி லக்ஷ்மி
தலையில் அடித்துச் சொல்லிய வீரியமிக்க வரிகள் பெரியம்மா,நன்று ! நாளுக்கு நாள் நமது நாட்டில் பெருகிவரும் விவசாயப் பெருமக்களின் தற்கொலைகள் மனதை உலுக்குகின்றன. இந்திய ஓர் விவசாய நாடு என்று வெறும் வார்த்தைக்குத் தான் கூச்சலிடுகிறோம்.ஆயினும் மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் சோகத்தைப் போக்க சாமானியர்களுக்கு சரி, அரசாங்கமும் சரி பெரிதாக ஏதும் செய்கிறோமா என்றால் விடை பூஜ்ஜியம் தான். வேலா வேலைக்கு நாம் உண்ணும் போது , நம் தட்டில் உணவு வருவதற்கு உழைத்த விவசாயியின் குடும்பம் பசியிலும் பட்டினியாலும் வாடக்கூடாது என்று வேண்டிக்கொள்வோம். என்று நம் மண்ணின் சாதாரண விவசாயிகள் வாழ்க்கைத் தரம் மேம்படுகின்றதோ, அன்று தான் உண்மையிலேயே பொங்கல் திருநாள்.