ஆர்ப்பரித்து எழும் கடல் அலையே எதனை இழுத்து செல்ல இத்தனை ஆக்ரோஷம் உள் இருக்கும் வரையே உன் குமுறல் நிலைக்கும் கரையை தொட்ட பின் மண்ணில் சங்கமம் மனதிலும் குமுறல் உண்டு பிறர் செய்யும் அநியாயம் கண்டு வார்த்தைகளை சிதறி வருத்துவதை விட காற்றோடு பேசி கலைத்து விடல் நன்று