வாசகர் கவிதைகள் ஓவியம் : எஸ்.ஏ.வி.இளையபாரதி வலிகளின் பாதையில் வாழ்க்கைப் பயணிக்கிறது காலத்தின் கேள்விகளில் விடையறியாப் பொழுதுகள் கனத்த இதயங்களுக்கிடையே விடைகள் சிக்கித் திணறுகின்றன. இரவாகத் தொடராமல் பகலாகவும் விடியாமல் மயங்கிக்கொண்டே இருக்கிறது. மங்கிய மாலையாய் ஒரு விடை எந்த விடியலில்-விடை வெளியேறி வெளிச்சத்தைக் காணும்? - சு. இலக்குமணசாமி, மதுரை. ================================================== விடை ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். விடையும் ஒவ்வொருவருக்கு ஒரு விடையாகத்தான் இருக்கும். "பாரதிமணியன்"