இணைந்திருந்த நாட்களை விடவும் பிரிந்திருந்தவை தான் அதிகம். என்றாலும், நம்மிடையே கண்ணே! அன்பு மிகும் விந்தை தான் என்னே! எந்நிறத்தில் நீயும் இன்று உடை அணிந்திருப்பாய் என்று ஊகித்து, அது சரியா என்று கேட்பதெனக்குப் பிடித்த ஒன்று. நாம் அதிகம் பேசிக் கொள்வதில்லை. நம் பணியும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. இருந்தாலும் பெரிதும் வருத்தமில்லை. இருப்பின், உன் குரல் முன் அது நிற்பதில்லை. செயல் முடித்த பின்னே வரும் மகிழ்ச்சி, உன்னுடன் பகிர்வதில் அதிகரிக்கும். இதை எண்ணிட மறையும் என் தளர்ச்சி, என் செயலும், மேலும் சிறந்து விடும். மனமெல்லாம் மறுபடி என்று உன்னை நான் காண்பேன் என்றே எண்ணமிடும். ஒவ்வொன்றாய் நாள் போகவும் என்னை ஒரு மகிழ்ச்சியும் வந்து சேர்ந்து விடும்.
Thanks for your wish and appreciation SuryaKala. Very happy to receive feedbacks from you in this section too. -rgs