நாற்திசை சென்றிவர் நன்குகலை யிற்தேர்ந்து மாற்றங்கள் தந்திவர் மக்களைக் காத்தாரே தோற்றத்தில் தீரம் தொடுக்கும் கவியினில் காற்றைபோல் சீறும் கவி தன்னுள்ளே கோடி தடங்கள்கள் கொண்டாலும் பொன்னான உள்ளால் பொசுக்கிட்டு நீர்அவற்றை தன்னாடே முக்கியம் தன்மக்கள் நல்வாழ்வே தன்கொள்கை என்றக் கவி முட்புதராய் மண்டி முளித்திருந்த மக்களை தட்டிக் கொடுத்தீரே தங்களின் நற்கவியால் வெட்டிட வெட்டிட வேர்பிடித்த தீயோரை வெட்டி எறிந்த கவி உங்களைப் பெற்றதால் உள்ளத்தில் தீரமும் எங்களைஏய் போரை எதிர்திடும் வீரமும் தங்களின் நற்கவி தந்த அனைத்தையும் மங்காது செய்யும் கவி எத்தனை நற்கவி எம்பொழுதில் வந்தாலும் அத்தனை பேர்க்கும் அருள்தரும் நின்கவி வெத்தான வோரும் வெகுண்டெழ செய்திட்ட முத்தே கவியேநீ வாழ் தன் மந்திரக் கவியால், மக்களை மாற்றிய மகத்தான கவியை, போற்றி நம் புகழைக் கூட்டுவோம்........
தெரியாமல் நான்பதித்தேன் தொன்தமிழன் உன்னை வரியமைத்தேன் மக்கள் வணங்குவர் என்றெண்ணி என்னெண்ணம் பொய்த்தது என்னால் உமக்கிழுக்கு வந்ததால் வருந்துகிறேன் நான் இடமும் பொருளும் இனியென்றும் பார்ப்பேன் தொடரேன் இதனையினி நான்
Please do not get discouraged Raman. There may be many reasons for people not responding to you. I read this only now, from Tamil Poetry section and was a bit surprised and to see it here too. To be frank, I don't know about the structure of a veNbaa and hence thought that I was not one right enough to appreciate. Sorry, had it hurt you. -rgs
வணக்கம் ஸ்ரீ நான் இதனால் சோர்ந்து போகவில்லை, ஆனால் கொஞ்சம் வருந்தினேன். எப்பேர் பெற்ற மனிதர் அவர் அவரை போற்ற ஒருவரும் முன் வரவில்லையே என்ற வருத்தமே தவிர, எனக்கு பின்னூட்டம் வரவில்லை, நான் எழுதியதை யாரும் பாராட்டவில்லை என்று எனக்கு வருத்தம் இல்லை. நன்றிகள் ஸ்ரீ இறைக்கு நிகரொன்று இங்குண்டு அஃது இறையைக்காட் டும்நம் தமிழ் :thumbsup
My dear Raman, I am very new to this forum and was pleasantly surpised to read your wonderful words of praise for Maha Kavi. The words are not enough to praise that gifted poet who revolutionized through his powerful words of wisdom. Your words of praise of that gifted poet were as sharp as a sword and so was your second post. I love your poem and I certainly wish you continue to write.
வணக்கம் விஸ்வமித்ரா, உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பாராட்டு கண்டு நெகிழ்ந்தேன். நான் தொடர முயற்சிக்கின்றேன்.....:thumbsup மிக்க நன்றிகள் நண்பா.......