நாற்திசை சென்றிவர் நன்குகலை யிற்தேர்ந்து மாற்றங்கள் தந்திவர் மக்களைக் காத்தாரே தோற்றத்தில் தீரம் தொடுக்கும் கவியினில் காற்றைபோல் சீறும் கவி தன்னுள்ளே கோடி தடங்கள்கள் கொண்டாலும் பொன்னான உள்ளால் பொசுக்கிட்டு நீர்அவற்றை தன்னாடே முக்கியம் தன்மக்கள் நல்வாழ்வே தன்கொள்கை என்றக் கவி முட்புதராய் மண்டி முளித்திருந்த மக்களை தட்டிக் கொடுத்தீரே தங்களின் நற்கவியால் வெட்டிட வெட்டிட வேர்பிடித்த தீயோரை வெட்டி எறிந்த கவி உங்களைப் பெற்றதால் உள்ளத்தில் தீரமும் எங்களைஏய் போரை எதிர்திடும் வீரமும் தங்களின் நற்கவி தந்த அனைத்தையும் மங்காது செய்யும் கவி எத்தனை நற்கவி எம்பொழுதில் வந்தாலும் அத்தனை பேர்க்கும் அருள்தரும் நின்கவி வெத்தான வோரும் வெகுண்டெழ செய்திட்ட முத்தே கவியேநீ வாழ் தம் மந்திரக் கவியால், மக்களை மாற்றிய மகத்தான கவியை, போற்றி நம் புகழைக் கூட்டுவோம்........-)
நல்லதொரு வீணை, இன்று நமக்குள் இல்லை இருப்பினும் தமிழின் பிரதிநிதியாய் அவன் தந்த வேட்கை இன்றும் என்றும் எனக்குள் அணையா விளக்காய் .... மகாகவியின் பிறந்த தினத்தில் நல்லதொரு கவியாரம் தந்த தம்பிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.Bow
That was very good to read Raman, and the content was really nice. I just worry only about the typos which might have occurred due to the transliteration software that you use. Request you to watch out for this. -rgs
Rasithen Raman...very arumai. un sorvilaiyadal..Rgs sonna maadhiri...check for the spelling mistakes..(which happens to me too..:-( ) Andha advice enakkum dhan.. sriniketan