சொல்லில் இனிமை உறவுகள் தரும் வாழ்வில் நட்பு முழுமையைத் தரும் சிரிப்புகள் என்றும் இளமையைத் தரும் சினங்கள், நீங்கா முதுமையத் தரும் விவேகம் இல்லா வேகம் வெறுமையைத் தரும் பொறுமை ஒன்றே வாழ்க்கைத் தரும் !! சினம் கொண்டு மனம் நொந்து போகாதே !! பணம் தேடி குணம் விட்டுச் சாகாதே!! வள்ளுவன் சொல்லியப் பொறுமையை வாழ்வினில் வாய்க்கப் பெற்றால் வையகம் உன்னைப் போற்றிடும் உன் தோளினில் மாலைகள் சூட்டிடும் !! சிரிப்பது அழகு சிந்தித்து நீ பழகு மழழைப் போலச் சிரித்திடு மண் போலப் பொறுத்திடு பொறுத்தவர் வீழ்வதில்லை இதனை மறுத்தவர் வாழ்வதில்லை !! பொறுமையோடு இயற்றினேன் புதுக்கவிதை என் 'பிரிய'மானத் தோழி தந்த தலைப்பில் ஒருக் கவிதை !!! --- நிரஞ்சன் https://www.facebook.com/TamizhoduNaan
பொறுமையோடு இயற்றிய புது கவிதை உங்களுக்கு பெருமைதேடி தரும் .தலைப்பு தந்த உங்கள் பிரியமான தோழிக்கும் பெருமையில் பங்கு உண்டு.