புதிதாகத் திருமணம் செய்த பெண் தனது புதிய வாழ்வை இனிமையாக்க விழைந்து, கணவனின் அன்னையை, எந்த நாளிலும் கணமும் எதிர்க்காது, நல்ல பெயர் எடுக்க உறுதி பூண்டாள்; கணவனும் அவளுடைய உறுதி கண்டு மனம் மகிழ்ந்தான்; ஆனால், அன்னையோ, அவளைச் சீண்டிக்கொண்டே, தன்னுடைய நேரத்தைக் கழித்து வந்தாள். ஒரு நாள் மருமகளைச் சீண்டி மகிழ்ந்திட, ஒரு கேள்வியை ஆரம்பித்து வைத்தாள். 'நான் உட்கார்ந்தால்?' என அவளைக் கேட்க, 'நான் நிற்பேன் அம்மா' என அவள் பதில் தர, மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும் என்று விரும்பி, தொடர்ந்தாள்: 'நான் சோபாவிலே உட்கார்ந்தால்?' 'நான் சேரில் உட்காருவேன் அம்மா!' 'நான் சேரிலே அமர்ந்துவிட்டால்?' 'நான் ஸ்டூலில் அமருவேன் அம்மா!' 'நான் ஸ்டூலிலே அமர்ந்துவிட்டால்?' 'நான் பலகையில் அமருவேன் அம்மா!' 'நான் பலகையிலே அமர்ந்துவிட்டால்?' 'நான் தரையில் அமருவேன் அம்மா!' 'நான் தரையிலே அமர்ந்துவிட்டால்?' 'நான் தரையில் குழி தோண்டி அமருவேன்!' பொறுமை சோதிக்கப்பட்டதால், அவளும் அருமையாக 'அம்மா' என்பதை விடுத்தாள்! அத்துடன் நிறுத்தாத அம்மா சிரிப்புடன், அடுத்ததாகக் கேட்டாள் ஒரு கேள்வியை! 'நான் குழிக்குள்ளே உட்கார்ந்துவிட்டால்?' 'நான் குழியை மண்ணால் மூடிவிடுவேன்!' :twisted: . . . :thumbsup
Hai RR, PATIENCE is a powerful weapon. If you will use it in a proper and correct way you are the winner in all the obstracles of your life. very nice writeup