Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம் புதாராம் அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷன்ணே துஷ்கர்ம தர்மமபனீய சிராயதூரம் நாராயண ப்ரணயனீ நயனாம் புவாஹ: 9 எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன். கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய மேலிஷீ ஸம்ஸ்திதாயை தஸ்யை நமஸ்த்ரி புவனைக குரோஸ்தருண்யை! 10 திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.
Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை 11 நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும். நமோஸ்து நாலீக நிபானனாயை நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை நமோஸ்து நாராயண வல்லபாயை: 12 பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை நமோஸ்து பூ மண்டல நாயிகாயை நமோஸ்து தேவாதி தயாபராயை நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13 முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன். நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை நமோஸ்து தாமோதர வல்லபாயை 14 சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.
Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15 சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம். ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தனானி ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாணி த்வத் வந்தனானி துரிதா ஹரணோத்யதானி மாமேவ மாதரனிசம் கலயந்து மான்யே 16 எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.
Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத் ஸந்தனோதி வசனாங்க மானஸை த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17 தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன். ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே தவல தராம்சுக கந்த மால்ய சோபே பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம் 18 சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாம்னு தாங்கீம ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீம் அக்ஷே லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம் 19 பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன். கமலே கமலாட்ச வல்லபேத்வம் கருணாபூர தரங்கிதைரபாங்கை அவலோகய மாமநிஞ் சனானாம் ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20 எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.
Re: பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்& ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம் த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம் குணாதிகா குரிதர பாக்ய பாகினோ பவந்தி தே புவி புத பாவிதாசயா 21 மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.