நுகத்தடியில் இருந்து மாடுகள் விடுபடட்டும். கலப்பையும் கழுவி, பொட்டிட்டு வைக்கப் படட்டும். அதைப் பிடித்த கைகள் கூம்பி சூரியனைத் தொழட்டும் அவற்றுக்கு உரியவரின் நெஞ்சில் இன்பம் வரட்டும். குழந்தைகளும் பெரியோரும் ஒன்றாய் கூடட்டும். கலகலவென பேச்சொலியும் வீடெங்கும் கேட்கட்டும். கணகணவென புது அடுப்பும் மகிழ்வுடன் எரியட்டும் களகளவென பொங்கல் நன்கு ஓசையிட்டு பொங்கட்டும். நான் முந்தி, நீ முந்தி எனச் சிறார்கள் ஓடட்டும் அதைக் கண்டு நகைத்தபடி பெரியோர் அதட்டட்டும். வீடு முழுதும் பளிச்சென்று ஒளியுடன் துலங்கட்டும். வீதியெங்கும் பார்ப்பவரும் சிரித்தபடி இருக்கட்டும். நம் மனதில் இருந்த துயர் எல்லாம் ஒழியட்டும் தீக்குள் காகிதம் போலே தீக்குணம் நீங்கட்டும். தேய்த்தாலும் ஒளிரும் பொன் போல் மனம் ஆகட்டும். எந்நாளும் இன்பம் நம் இல்லத்தில் நிறையட்டும். ஐஎல் அன்பர்களுக்கு இனிய போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
அருமையான வாழ்த்து...... நன்றி rgs, தங்களுக்கும் தங்களின் குடும்பதினருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Thanks Theanmozhi. To be honest, started thinking about writing one, after seeing yours. So the credit should go to you first. -rgs
Never knew that you are too humourous, by the way. What you wrote was a nice one Madam. Thats why I responded to that immediately. Besides, I was all enthusiastic and pepped up in 2010, where I wrote for each festive occasion. This continued till mid 2011. Just remembered those good old days in IL, when there were many who gave feedback to what I scribbled then. And, you are too modest. Thanks. -rgs
Rgs உங்கள் பொங்கல் வாழ்த்துக்கு நன்றிகள் பல .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .அனைத்து செல்வங்களும் பால் போல் பொங்கட்டும்