ஓடும் நதியை உற்று பார்த்தேன் துள்ளி விளையாடும் மீன்கள் கண்டேன் நீருக்கடியில் கற்கள் கண்டேன் இரு கைகளிலும் நீர் ஏந்தி ஆசை தீரப் பருகினேன் அம்மம்மா என்ன சுவை தேனினும் இனிய சுவை தீந்தமிழினும் இனிய சுவை எங்கள் தாமிரபரணி நீரின் சுவை ஆன்மீகம் பொங்கும் நெல்லை சீமை பொருநை கரை எங்கும் ஆலயங்கள் தாமிரபரணி பிறக்கும் இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை எத்தனை எத்தனை கோவில்கள் நாரணனுக்கு நவ திருப்பதி முழுமுதற் கடவுள் முக்கண்ணனுக்கு நவ கைலாயங்கள் ஆளும் தெய்வங்கள் அம்மை காந்திமதி அப்பன் நெல்லையப்பர் வீதிகள் தோறும் மக்களை காக்கும் மாதாக்கள் பலர் சங்க இலக்கியங்கள் பெயர் தாங்கும் வீதிகள் அறுபத்து மூன்று நாயனார்கள் பெயருடன் வீதிகள் பன்னிரு ஆழ்வார்களை காட்டும் வீதிகள் இவை அனைத்தும் கொண்டதே எங்கள் ஊர் ஆங்கிலேயன் அகன்று விட்டாலும் அவன் விட்டு சென்ற மதம் அகலாத ஊர் அவன் கட்டிய கல்வி கூடங்கள் நிறைந்த ஊர் எளிமையான மக்கள் எளிதில் ஏமாறாத மக்கள் அன்புக்கு தலை வணங்கும் மக்கள் அநியாயத்துக்கு அடி பணியாத மக்கள் அளவோடு செலவிட்டு வளமோடு வாழும் மக்கள் இதுவே எனது ஊர்
அருமையான கவிதை. நானும் திருநெல்வேலிகாரன் தான். அப்படியே ஊரை கண்முன் கொண்டு நிறுத்திவிட்டார்கள். PS - just learning to type in tamil script.
அன்புள்ள பெரியம்மா, அழகான கருத்துச் செறிவு மிக்க கவிதை! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற போதிலும் அவரவர் பிறந்த மண்ணிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. புஷ்பவல்லி
@PushpavalliSrinivasan உண்மை அவரவர் பிறந்த ஊருக்கு என்று சில பெருமைகள் உண்டு .அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிறிய சந்தோஷம்.நன்றி மா