அவசரமாய் கிளம்பி ஆறு மணி பேருந்தில் இல்லம் திரும்பி இனியாவின் தட்டில் இரவுணவைப் பிசைந்து மாடிக்குச் சென்றதும் தொடங்கியது அன்றும் ஒரு புது நிலாக் கதையும். நிலவில்லா வானை வெறித்த அச்சுட்டி "இன்று அமாவாசை!" என்ற தாய் முகம் பற்றி மேல்விளக்கம் கோர 'அது அம்மா வீட்டுக்குப் போச்சு!' என்ற பதிலில் புதிய புரிதலில் தொடர்ந்தது பேச்சு. சில நாட்கள் செல்ல, அன்றிரவும் மாடியில் உணவு கொண்டவள் நிலவைக் காண அது சோர்ந்திருக்க, கரைந்து "இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நீ வந்தா போதும்! சரியா?" என்று கேட்க, உள்ளே ஓர் முடிச்சு நெகிழ, அழுதாள் தாயுமன்று தனியாய்!