ராமன் பெண் பார்க்கப் போனான். அவனுடன் அவனுடைய நண்பன் பாலுவும் , பாலுவின் மனைவி சுமதியும் உடன் சென்றனர். ராமன் பெண்ணைப் பிடித்து விட்டதாக அங்கேயே சொல்லி விடுகிறான். சுமதி பாலுவிடம் கேட்கிறாள் , ” என்னங்க , பெண் ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறாள் . உங்களுக்கும் தெரியும் . உங்க ஃப்ரெண்டு பாட்டுக்கு தலையை ஆட்டி விட்டார். நீங்களாவது அவருக்கு சொல்லக் கூடாதா ?” பாலு சுமதியிடம் சொல்கிறான் : ” உன்னைப் பெண் பார்க்க நான் வந்தபோது அவனும் என்கூட வந்தான் . அவன் மட்டும் எனக்கு ஏதாவது சொன்னானா என்ன ?”