பொதுவிடங்களில் மட்டுமன்று, எப்போதும் வாழ்வில் கடைபிடிக்க ஏற்ற குணங்களின் தொகுப்பு,என் சொற்களில்,அறிவுரையன்று- பிறருடன் பழகுமுறை பற்றிய சிறு நினைவூட்டல்,எனக்கும் சேர்த்தே ! அழுக்காறு கொள்ளோம் ! ஆகுலிக்கச் செய்யோம் ! இகழ்வுரை வழங்கோம் ! ஈடழிவு தவிர்ப்போம் ! உடறல் செய்யோம் ! ஊரோமல் பேசோம் ! எண்ணம் தாழோம் ! ஏகடியம் பேசோம் ! ஐயமுறச் செய்யோம் ! ஒண்மை துறக்கோம் ! ஓடியம் மொழியோம் ! ஒளதாரியம் விலக்கோம் ! இஃதனைத்தும் மறவோம் ! சொற்பொருள்: அழுக்காறு- பொறாமை ஆகுலி -துன்புறுதல் ,ஆகுலித்தல் -துன்புறுத்தல் (சொல்லினாலும்,செயலினாலும்) இகழ்வுரை- பிறரைத் தாழ்ச்சியாகப் பேசுதல் ஈடழிவு- பிறரது பெருமையைப் பழித்தல் உடறல்-பிறரைப் பகைத்தல்,சினங்கொள்ளுதல் ஊரோமல் -ஊர்வம்பு ஏகடியம் -பகடி,கிண்டல் செய்தல் ஐயம்-மனக்குழப்பம், ஐயமுற-(பிறரை)மனக்குழப்பமுற ஒண்மை-நன்மை(நற்பண்பு),மேன்மை,ஒழுங்கு ஓடியம்- (சான்றோர் கூடிய)அவை ஏற்காத பேச்சு,பரிகாசம் ஒளதாரியம்-பெருந்தன்மை Regards, Pavithra
நன்றி லக்ஷ்மி ! பிறருக்குப் புரியாதபடி பதிவதில் பலனென்ன ? ஆகையினால்,தேவைப்படுவோர்க்குப், பொருள் விளக்கமும் சேர்த்துவிட்டேன்.
இப்போது தான் வந்திருக்கிறீர்கள்,அதற்குள் ஏன் திரும்பவும் ஓட வேண்டும் ? கொஞ்சம் இருங்கள் அப்புறம் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒட்டிவிடுகிறோம் ! பாராட்டிற்கு நன்றி,GG !