சிறைப்பட்ட மேககூட்டத்தின் பின்னிருந்து ஊடுருவி உன் வெப்பக்கதிர் கரங்கள் கொண்டு பூமிக்காதலியின் வெள்ளை பனிப்போர்வையை விலக்கி நிர்மலமான அவள் முகத்தை ரசிக்க துடிக்கும் கதிரவனே உன் அன்பு பார்வையில் பச்சை போர்வை முளைக்கும் வரை ஊடலில் இருக்கும் தன்மானம் நிரைந்த உன் பூமிக்காதலி தன் தூய்மையான வெள்ளை பனியை குளிர்ந்தாலும் விட்டுக்கொடுப்பாளோ?
@jskls பூமித்தாய் கதிரவனின் அணைப்பை எதிர் நோக்கி வெள்ளை ஆடை உடுத்தி தவம் செய்கிறாளோ .உங்கள் கவிதை அந்த காட்சியை கண் முன் காட்டியது
@jskls நன்று லக்ஷ்மி ! வெண்ணிறாடை மண்மகள் நாளைப் பசுமையாடை மணமகளாய் மாறுவாள். விண்ணிருந்து கதிரவன் கரங்கள் நீட்டத் தன் மேனி பூத்துக் குலுங்குவாள் . அந்த நாளின் வரவுக்காய்க் காத்திருக்கும் உங்கள் ஆவல் புரிந்தது . பந்தாய்ச் சுழலும் பூமிக்கோளம் காலமாற்றம் கொண்டு வருகுது..... இளவேனில் நாளை வந்திடும்,உளத்தில் மகிழ்ச்சி பொங்கிடும்....