மனிதர்கள் அனைவரிடமும் ஒரே குணத்தை எதிர் பார்க்க முடியாது .ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களே வெவ் வேறு குணநலன் கொண்டவர்களாக இருக்கும் போது சமுதாயத்தில் அனைவரும் வேறு பட்டு தான் இருப்பார்கள் .சிலர் கல்வியில் சிறந்து விளங்குவர்.சிலர் தொழில் துறையில் சிறப்பு உடையவர்களாக இருப்பார்கள் .சிலர் விவசாயத்தில் சிறப்பு பெற்றிருப்பார்கள் .இதுவே இயற்கை .அப்படி இருக்க தான் அனைத்து துறைகளிலும் சிறந்தவன் என்ற மமதையோடு இவன் துறையை சார்ந்திராத ஒருவனிடம் போய் தன் திறமையை காட்டினால் இவனை பைத்தியக்காரன் என்று தான் நினைப்பார்கள் ..ஆனால் இந்த பைத்தியம் தான் கேட்ட கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை என்று எள்ளி நகையாடுவான் . இப்படிப்பட்ட ஆள் ஒருவன் ஒரு முதியவரிடம் சிக்கினான் .தன்னை பற்றி மிக பெருமையாக சொல்லி கொண்டிருந்தான் .அந்த முதியவரும் பொறுமையாக கேட்டு விட்டு தம்பி என்னோடு வாருங்கள் .என் வயல்களை பாபார்க்கலாம் என்று அழைத்து சென்றார் .அப்போது அந்த வயலில் பெண்கள் நாற்று நட்டு கொண்டு இருந்தார்கள் .சீரான இடைவெளி விட்டு அவர்கள் நாற்று நடும் அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும் .இதை பார்த்த அந்த எல்லாம் தெரியும் என்று சொல்லி கொண்டு இருக்கும் ஏகாம்பரம் இது எப்படி சாத்தியம் .ஒரே அளவு இடைவெளி விட்டு எப்படி நாற்று நட முடியும் ..முன்னமே இடத்தை குறித்து வைத்து இருக்கிறார்களா என கேட்டான் . தம்பி இது எங்கள் பெண்களுக்கு உள்ள தனித்திறமை .இயற்கையாக அமைந்த திறமை .உங்களை போல் பள்ளிக்கூடம் சென்று படித்தவர்கள் இல்லை .நீங்கள் சொல்லும் 90டிகிரி 180'டிகிரி எல்லாம் இவர்களுக்கு தெரியாது .உங்கள் திறமைக்கு ஒரு சவால் .இதே போல் ஒரு பத்து நாற்று கன்றுகளை உங்களால் நட முடியுமா என கேட்டார்.அவனால் பதில் சொல்ல இயலவில்லை .தம்பி உங்கள் சிறப்புகளை உங்களை போன்றோரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் .அதுவே நல்லது .நீங்கள் கற்றதை அடுத்தவர் மேல் திணிக்காதீர்கள் .நீங்கள் கற்றதை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் .அடுத்தவரை நீங்கள் ஏன் இதை தெரிந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்காதீர்கள் .அதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்று கனிவாகவும் ஆணித்தரமாகவும் கூறினார். .