பட்சணமா பானகமா ஏன்டா..... கிருஷ்ணன மட்டும் நன்னா கவனிக்கறேள் எனக்கு மட்டும் பானகமும் நீர்மோருமா எப்படா சொன்னே எனக்கு பட்சணங்களை பிடிக்காதுனு அவனுக்கு மட்டும ராத்திரி விடிய விடிய பூஜை, பஜனை, பட்சணங்கள் கேட்டா என்ன கதை விடுறீங்க நான் சக்ரவர்த்தி திருமகனாம் எனக்கு அரண்மனையில் எல்லாம் கிடைத்திருக்குமாம் அவன் சிறையில் பிறந்து எங்கோ கோகுலத்தில் வளர்ந்த இடையன் அவனுக்கு யார் செய்துதருவார்கள்ன்னு சமாதானம் சொல்றேள் பார்க்க போனா நெய்யும் பாலும் வெண்ணையும் தின்னு நன்னா கொழுகொழுன்னு இருந்தான் அவன் வீட்டுல மட்டும் நாலு லட்சம் பசுக்கள் இப்படி நெய்யில் வளர்ந்த அந்த ஏழைகளுக்கு இத்தனை கவனிப்பு எங்கோ யாரோ ஒரு ஏழைக்கு இறங்கி பானகமும் நீர்மோரும் ஏற்றுக்கொண்டேன் அதையே புடிச்சுண்டேளே நான் எத்தனையோ தர்மத்தை மக்களுக்காக சொன்னேன் அதுல ஏதாவது ஒன்றை கடைபிடித்தீர்களா.... அதெல்லாம் விட்டுட்டிங்க கேட்டா பகவான் மனுசனா வந்து கடைபிடித்தார் சாமானியர்களால் செய்ய முடியுமா என்று எனக்கே விபூதி அடிக்கறேள் உங்க logic படி பார்த்தா கிருஷ்ணனுக்கு வெண்ணையும் அவலும் மட்டும் பிடிக்கும் அதுனால அதை மட்டும் வைப்பேளா சரி...போறேள் போங்க ஒரு சக்கரை பொங்கல், ஒரு புளியோதரை, கொஞ்சம் தயிர் சாதம் கூடவே நீர்மோரும் பானகமும் வைச்சா பரவாயில்லை அத விட்டுட்டு இருக்கறவனும் இல்லாதவன பார்த்து எனக்கு பிடிக்கும்னு உங்கள் சோம்பேறி தனத்தை மறைக்க என்னைய ஏமாத்தறேள் இருங்கடா இருங்க உங்களுக்கு இருக்கு நன்றி வாட்ஸ்ஹாப்
Thanks for visiting here. 2. Yes I agree. 3. But it is also part of creativity. That way it should be ok. 4. When world is advanced this for with discoveries and inventions because of out of box thinking by a few, the rest tend to encourage it. Regards.