படமும் பாடலும் பார்த்து நாள் ஆச்சு .உங்கள் கவிதைகளை கொட்டுங்கள் @jskls @PavithraS @Gaiya3 @GoogleGlass
கிருஷ்ணா உன் கண்கள் பொழிவது காதலா இல்லை கருணையா உன் கண்கள் வீசும் காதல் ஜ்வாலை தாங்க முடியாமல் தவிக்குதே என் உள்ளம் உள்ளத்தில் எரியும் காதல் ஜோதி எனை சுட்டு தகிக்கிறதே
அணையா விளக்கேற்றி அணைக்க மாட்டாயோ என ஆசையை ஆற்றினில் மிதக்கவிட ஆசைக்கு அணை போட அறியாத எனை ஆலிங்கனம் செய்தே ஆர்ப்பரிக்க மாட்டாயோ
கோதை : மாயம் என்கிறாய் கண்ணில் காதல் சொல்கிறாய் கண்ணா கண்ணன் : ஒளியில் கலந்துவிடு காதலில் கரைந்துவிடு என்னில் சரணடைந்துவிடு