பசுவிற்கு பழம் ராமேஸ்வரம் முதலான புனித ஸ்தலங்களில் பசுவிற்கு பழம் தானம் செய்யலாம். சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல் நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம். இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். தந்தை இருக்கும் போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக் கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோக்ஷனம் செய்யலாம். கோ-சம்ரோக்ஷனம் பரம ஔஷதம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.