1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 9

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Feb 17, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    இரவு விருந்திற்கான ஏற்பாடுகள் செய்ய மஞ்சரியும் வர்ஷிணியும் அர்ஜுனின் வீட்டிற்க்கு வந்தார்கள். இருவரையும் வரவேற்ற பாட்டி வர்ஷினியிடம் பழைய கதைகளை பேச ஆரம்பித்தார். அர்ஜுனிடம் சென்ற மஞ்சரி அவனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். இரவு உணவு வகைகளை சமைத்து கொண்டு இருந்த அர்ஜுன் மஞ்சரிக்கும் சில வேலைகள் தந்து விட்டு இருவரும் சேர்ந்து சமையலை முடித்தார்கள். அர்ஜுன் மஞ்சரியிடம் இயல்பாக பேசி கொண்டே வேலைகளை செய்தான். ஆனாலும் அவன் பார்வை வர்ஷினியிடம் அடிக்கடி சென்று மீள்வதை மஞ்சரி உணர்ந்து கொண்டாள். தான் வர்ஷினியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சரியின் முகத்தில் உருவாகும் கோபத்தை ரசித்து கொண்டே வேலைகளை செய்தான் அர்ஜுன்.


    பாட்டியிடம் பேசி முடித்த வர்ஷினி தானும் அவர்களுக்கு உதவுவதாக சொன்னாள். அர்ஜுன் வர்ஷினியிடம் நாம் இருவரும் சேர்ந்து அறையை அழகு படுத்தலாம் என்று சொன்னான். பாட்டியும் மஞ்சரியை அழைத்தால் மஞ்சரி அவர்களை விட்டு பாட்டியிடம் சென்று அமர்ந்தாள். ஆனாலும் அவளது கவனம் முழுவதும் அவர்கள் இருவரிடம் தான் இருந்தது. இதை கண்ட அர்ஜுன் வர்ஷினியிடம் மேலும் நெருங்கி பேச ஆரம்பித்தான். இதை பாட்டியும் கவனித்து விட்டதால் மஞ்சரியிடம் அவர்கள் இருவரும் சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் என்று சொன்னார். ஆனாலும் மஞ்சரியின் மனது சமாதானமாக மறுத்தது.


    வர்ஷிநிக்கும் அர்ஜுனின் நெருக்கம் இதமாக இருந்தது. அவனிடம் அதிகம் நெருங்கி பழகியிராதவளுக்கு இப்பொழுது இந்த நெருக்கம் சுகமாக இருந்தது. அர்ஜுன் தன்னை தான் காதலிக்கிறான் என்று வர்ஷினி முடிவு செய்து விட்டாள். கலர் பேப்பர் ஓட்டுவதற்காக மேலே ஏறிய வர்ஷினி அவனையே பார்த்து கொண்டு இறங்கியதால் கால் தவறி அர்ஜுனின் மேல் விழுந்தாள். விழ போனவளை அர்ஜுனும் தாங்கி கொண்டான். இதனை பார்த்த மஞ்சரிக்கு பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. இனிமேலும் இங்க இருந்து அவர்களின் நெருக்கத்தை பார்க்க முடியாது என்று நினைத்த மஞ்சரி பாட்டியிடம் சொல்லிக்கொண்டு தான் அறைக்கு சென்று விட்டாள்.


    அறைக்கு சென்றதும் படுக்கையில் விழுந்த மஞ்சரிக்கு கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை. எப்படி அவன் அவளிடம் இப்படி நெருக்கமாக பழகலாம் என்று அவள் மனம் கொதித்தது. அந்த நொடியில் தான் அவள் அர்ஜுன் மேல் வைத்து இருந்த காதலை உணர்ந்தாள். காதலை உணர்ந்ததும் மஞ்சரியின் மனம் இன்னும் சோர்ந்து விட்டது. தான் மட்டும் தான் அவனை காதலிக்கிறோம் அவன் மனமோ வர்ஷினியிடம் அல்லவா உள்ளது. தனக்கு என் இப்படி நடக்க வேண்டும். அவன் மேல் உள்ள காதல் தெரியாமலே போய் இருந்தால் இப்படி வருத்த படாமல் இருந்து இருப்போமே என்று நினைத்தாள். நீண்ட நேரம் சிந்தித்த மஞ்சரி ஒரு முடிவிற்கு வந்தாள். இனி அர்ஜுனிடம் இருந்து ஒதுங்கி இருக்க பழக வேண்டும் மேலும் அவர்களது காதலுக்கு தான் எந்த வித இடையுரும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும். அது தான் இருவருக்குமே நல்லது.


    விருந்திற்கான அனைத்து வேலைகளையும் முடித்த அர்ஜுன் மஞ்சரியை அழைத்து போக வந்தான். மிகவும் கஷ்டப்பட்டு மஞ்சரி அவனிடம் இயல்பாக நடந்து கொள்ள முயன்றாள். அவளிடம் மாற்றத்தை உணர்ந்த அர்ஜுன் அவள் தன்னிடம் கோபமாக இருக்கிறாள் வர்ஷினி சென்றதும் இந்த கோபம் மறைந்து விடும் என்று நினைத்தான். அதனால் அவனும் மஞ்சரியை அவள் போக்கிலேயே விட்டு விட்டான். அன்றைய விருந்திலும் அதற்கு பிறகு இரண்டு நாட்கள் வெளியே சென்ற போதும் மஞ்சரி, அர்ஜுன் மற்றும் வர்ஷினியிடம் விலகியே இருந்தாள். அவர்களை தவிர்க்க பாட்டியிடம் அடைக்கலம் புகுந்தாள். விருந்தன்று இரவே அவளது மாற்றத்தை உணர்ந்த பாட்டி அர்ஜுனிடம் அவளிடம் சென்று பேசி தன்னை தெளிவு படுத்த சொன்னார். ஆனால் அர்ஜுன் வர்ஷினி சென்ற பின் மஞ்சரியிடம் சொல்லி கொள்ளலாம் என்று விட்டான். அவன் வேறொரு பெண்ணிடம் பேசும் பொது மஞ்சரியிடம் ஏற்படும் தவிப்பு மற்றும் கோபத்தை ரசிக்க இப்படி செய்தான். ஆனால் அவன் செய்த கால தாமதமே அவன் காதலுக்கு வினையாக அமைந்தது.


    இரண்டு நாள் சுற்றுலா எல்லாம் முடிந்து வர்ஷினி இன்று அவளது ஊருக்கு கிளம்புகிறாள். அர்ஜுன் அவளிடம் நடந்து கொண்ட முறைக்கு காதல் என்றே முடிவு கட்டி இருந்த வர்ஷினி போகும் முன் தான் காதலை அவனிடம் தெரிவிக்க முடிவு செய்து இருந்தாள். அதனால் அர்ஜுன் தனியாக இருக்கும் நேரம் பார்த்து தான் காதலை தெரிவித்தாள்.
    அவள் சொன்ன வார்த்தைகளை கேட்ட அர்ஜுன் அதிர்ச்சி அடைந்தான் அவளிடம் மறுத்து பேச ஆரம்பித்தான்.

    "வர்ஷினி, நான் உன்ன காதலிக்கல. நீ என்னைக்குமே எனக்கு நல்ல friend தான்."

    அவனிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்து இராத வர்ஷினி கோபமாக பேசினாள்

    "எப்படி அர்ஜுன் சொல்றே? நான் வந்ததிலிருந்து நீ என்கிட்டே எவ்ளோ close 'அ நடந்துகிட்டே. நீ இப்படி யாருகிட்டையும் பேசி நான் பார்த்ததே இல்லே. உனக்கு என் மேல லவ் இருக்குது ஆனா மறைக்கிறே. என்ன பிரச்சனை உனக்கு?"

    "வர்ஷினி உனக்கு எப்படி புரிய வைக்குறதுனே எனக்கு தெரியலே. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லே. பிரின்ட்லியா தான் உன்கிட்டே பழகினேன் நீ இப்படி தப்பா எடுதுக்குவேணு எனக்கு தெரியலே. நான் உன்ன லவ் பண்ணவே இல்லே."

    "அப்போ நீ என்கூட பேசினதெல்லாம் பொய்யா? நீ ரொம்ப நல்லவன்னு நினைச்சு தான் நான் என் மனச பறிகொடுத்தேன். ஆனா நீயும் மத்த பசங்க போல timepass பண்ணிட்டு போய்டுவேன்னு நான் நினைக்கவே இல்லே. சரி இதுக்கு மேல உன்கிட்டே பேச எதுவுமே இல்லே நான் வரேன்"


    வர்ஷினி கோபித்து கொண்டு போவது கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி இல்லாததினால் அர்ஜுன் அமைதியாக இருந்து விட்டான். எப்படியாவது வர்ஷினி கிளம்பி விட்டால் இன்றைக்கே மஞ்சரியிடம் சென்று பேசி பார்க்கலாம் என்று அர்ஜுன் நினைத்து கொண்டு இருந்தான். ஆனால் பாவம் அவன் அறியவில்லை மஞ்சரி இந்த உரையாடலை முழுவதும் கேட்டு விட்டாள், அதனால் தன்னை பற்றி வர்ஷினி என்ன நினைத்தாளோ அதே மாதிரி இவளும் தப்பாக முடிவு எடுத்துவிட்டாள் என்று.


    அர்ஜுனும் வர்ஷிணியும் பேசிக்கொண்டதை எதச்சையாக மஞ்சரி கேட்க நேர்ந்தது. வர்ஷினி விட்டு சென்ற அவளது perfume ஐ அவளிடம் கொடுக்க வந்த மஞ்சரி அவர்கள் இருவரும் பேசி கொண்டதை முழுவதும் கவனித்தாள். அவளால் வர்ஷினி பக்கம் தவறு இருப்பதாக நினைக்க முடியவில்லை. அவள் பார்த்த வரைக்குமே அர்ஜுன் வர்ஷினியிடம் நெருக்கமாக தான் இருந்தான். அப்படி எல்லாம் பழகிவிட்டு பிரின்ட்லி ஆக தான் பழகினேன் என்று இவனால் எப்படி சொல்ல முடிகிறது? அர்ஜுன் இப்படி பட்டவனா? என்று ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் முட்டி மோதி மொண்டு இருந்தது. எனவே பேசாமல் திரும்பி தனது அறைக்கு வந்து விட்டாள்.

    அவளால் அர்ஜுனை பற்றி ஒரு சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இதுவரை அவனிடம் எந்த தவரையுமே கண்டு இராத மஞ்சரிக்கு வர்ஷினி வந்ததிலருந்தே அர்ஜுன் நடந்து கொண்ட முறை வித்தியாசமாக தான் இருந்தது. எனவே அர்ஜுன் வர்ஷினியை காதலிக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏன் அவன் அதை அவளிடம் இருந்து மறைக்கிறான் என்று குழம்பி கொண்டு இருந்தாள் மஞ்சரி.


    மஞ்சரியின் குழப்பங்களை எதுவும் அறியாத அர்ஜுன் மஞ்சரியிடம் தன் காதலை தெரிவிக்க அவளை வெளியில் அழைத்து செல்ல முடிவு செய்தான். அர்ஜுன் வந்து ஹோட்டலுக்கு அழைத்ததும் மஞ்சரி வர ஒப்புக்கொள்ளவில்லை. அவளை வற்புறுத்தி அழைத்து சென்ற அர்ஜுன் அங்கு இருந்த புல்வெளியில் அவளை அமரவைத்து தான் கொண்டு வந்து இருந்த ஒற்றை ரோஜாவை நீட்டி தன் காதலை அவளிடம் சொன்னான்.

    அவனிடம் இப்படி ஒரு செய்கையை எதிர்பார்த்து இராத மஞ்சரி ஒரு நொடி சிலையாகி போனாள். ஆனால் அவள் மனதில் முதலில் உதித்தது கோபமே.

    "என்கிட்டே ஐ லவ் யு சொல்ல என்ன தைரியம் உங்களுக்கு? இப்போ தான் வர்ஷினிய லவ் பண்ணிட்டு அவ மனச காய படுத்தி அனுபுனீங்க அதுக்குள்ள என்கிட்டே லவ் சொல்ரீங்கள? உங்கள் மாதிரி ஆளோட வலையிலே நான் சிக்க மாட்டேன். இந்த எண்ணத்தே மொதல்லே மறந்துருங்க" என்று கத்தி விட்டாள்

    அவள் தான் காதலை சொன்னதும் வெட்கபடுவாள், ஒத்து கொள்ளுவாள் என்று பல கற்பனை செய்து கொண்டு வந்த அர்ஜுனுக்கும் இது அதிர்ச்சியானது

    " என்ன பத்தி தப்பா பேசறியா நீ? நான் வர்ஷினிய லவ் பண்றேன்னு எப்பாவது அவ கிட்டேயோ இல்லே உன்கிடேயோ சொல்லி இருக்கனா? அவளா அப்படி நினைச்சிட்டு பேசினா நான் என்ன பண்ண முடியும்? அவ பேசினது கேட்டு நீ என்ன சந்தேக படறியா? உன்னைய நான் பார்த்த நாளிருந்து உருகி உருகி காதலிச்சேன்? இனிமே காதல்ங்கற ஒரு வார்த்தை ஏன் வாழ்கையிலேயே கிடையாது. வா போலாம்"


    திரும்பி வந்த பயணத்தில் இருவருமே பேசிக்கொள்ள வில்லை. தன்னை போய் சந்தேக பட்டாளே என்று அவனும் அவளை காதலித்து விட்டு இப்போது அவள் போனதும் தன்னிடம் காதலை சொல்கிறானே என்று அவளும் வருந்தி கொண்டு இருந்தனர்.
     
    1 person likes this.
    Loading...

  2. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Priia..
    enna pa.. ippadi rendu perum oruthar mel oruthar kobama irukkanggale!
    odal started.. oodal poi koodal yeppo?
    Arjun kobam neengi yeppadi than kathalai manju ku puriya vaikka poran?
    eagerly waiting..
    -devi.
     
  3. bsaranya

    bsaranya Senior IL'ite

    Messages:
    56
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi priya,kathalarkul igo vandu sandai poduvatalellam sagajam pa.nice update.
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    rendu perume ippo kovama irukkanga...
    epdiyo varsini kilambi poita.........
    parklam arjun manju rendu perthla yaru 1st kovatha vidranganu.........
    nice update.....
     
  5. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    acho enna pa ipdi sandai pottutu poitanga rendu perum....
    yaaru first compromise pannuvanga....arjun thane!!!!
     
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Hi priia192,
    It is a nice love story.But because of arjun's misunderstanding,he lost both
    varshini and manchari,I hope arjun and manchari will be together soon!
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    interesting to read priya.
     
  8. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Nice updates piira,
    Jus now completed reading all. Avan paati vandhu sonadhaan prachana theerum
     
  9. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    pls put next update!!!
     
  10. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    pl next update kodungappa
     

Share This Page