1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 5

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Jan 25, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    பாஸ்டன் விமானநிலையத்தில் இருந்து வெளியில் வரும்பொழுது இரவுமணி 10.30. வந்தவுடன் ஜனவரிமாத குளிர் மஞ்சரியை உறைய வைத்தது. அவள் அணிந்து இருந்த ஜெர்கினையும் தாண்டி குளிர்நடுக்கியது. அவளது நிலைமையை உணர்ந்த அர்ஜுன் தனது subzero ஜெர்கினை அவளுக்கு கொடுத்து அணியசொன்னான்.

    "நீ போட்டு இருக்கிற ஜெர்கின் எல்லாம் இந்த குளிருக்கு தாங்காது. இந்த ஜெர்கினே போட்டுக்கோ."

    "இல்லே வேண்டாம். நான் சமாளிச்சுக்குவேன். நீங்க என்ன பண்ணுவீங்க?"

    "எனக்கு ஒரு ஜெர்கின் இருக்கு. இதே மொதல்லே போடு. இங்க இருக்கிற குளிருக்கு தகுந்த மாதிரி எடுத்திட்டு வரது இல்லியா? நீ போட்டு இருக்கிற ஜெர்கின் summer 'கூட உனக்கு தாங்காது"

    நல்லதொரு ஜெர்கினை வாங்காது விட்டோமே என்று ஏற்கனவே வருந்திகொண்டு இருந்த மஞ்சரிக்கு அர்ஜுனின் பேச்சு கோபம் வரவைத்தது. இருந்தாலும் குளிர்தாங்க முடியாமல் அவன் சொன்னதுபோல் அவனது ஜெர்கினை அணிந்து கொண்டாள். அர்ஜுனின் உடம்பிலிருந்து சூடாக வந்த ஜெர்கின் மஞ்சரிக்கு நல்ல கதகதப்பாக இருந்தது.
    இருவரும் பேசிக்கொண்டே அவனது நண்பன் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். அர்ஜுன் தனது நண்பன் முரளிக்கு மஞ்சரியை அறிமுகபடுத்திவைத்தான். முரளியிடம் இருந்து கார்சாவியை வாங்கிகொண்ட அர்ஜுன் மஞ்சரியை அழைத்து கொண்டு பயணமானான்.

    முரளி, "இவங்கள டிராப் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு போறமா?"

    அர்ஜுன், " இல்லேமுதல்ல ரெஸ்டாரன்ட் போய் சாப்புடுறோம். அப்புறமா வீட்டுக்கு போய்க்கலாம்"

    அர்ஜுனின் இந்த பதிலை கேட்டு முரளிக்கு அதிசயமாக இருந்தது. அர்ஜுன் அதிகமாக ஹோட்டல் உணவை விரும்பமாட்டான். முடிந்தவரை வீட்டிலேயே சாப்பிட்டு விடுவான். இப்பொழுது கூடஅவனுக்காக செய்த உப்புமா வீட்டில் இருந்தது. இதை விட அதிசயம் அவன் கூட அழைத்து வந்த மஞ்சரி. அதிகமாக பெண்களிடம் பேசாத அர்ஜுன் மஞ்சரியை தன்னோடு அழைத்து வந்தது நம்பமுடியாததாக இருந்தது.

    அவனுக்கு தெரிந்து அர்ஜுன் எந்த பெண்ணுடனும் பழகியதில்லை. முடிந்தவரை பெண்களிடம் இருந்து ஒதுங்கிவிடவே பார்ப்பான். சின்னவயதில் எதாவது காதல்தோல்வியாக இருக்கும் என்று நண்பர்கள் கூட கிண்டல் அடித்தது உண்டு. அதைகேட்டு சிரிப்பானே ஒழிய பெண்களிடம் அவனது ஒதுக்கத்தை பற்றி யாரிடமும் அர்ஜுன் சொன்னது இல்லை. யாரும் அர்ஜுனை அந்த அளவு நெருங்கிபார்த்தது இல்லை. நன்றாக பழகினாலும் அவனது சொந்த விஷயங்கள் பற்றியாரிடமும் அவன் பகிர்ந்துகொண்டது இல்லை.

    அர்ஜுன் அந்த பகுதியிலிருந்த நல்லதமிழ்நாட்டு உணவகத்திற்கு மஞ்சரியை அழைத்து சென்றான். அங்கு அர்ஜுன் மஞ்சரியை நன்கு கவனித்து கொண்டதை பார்க்க பார்க்க முரளிக்கு சந்தேகம் வலுத்தது. இவன் என்ன இந்த பெண்ணை காதலிக்கிறானா என்று.

    மஞ்சரிக்கு அர்ஜுன் தன்னை பற்றி அக்கறை எடுத்து கொண்டது இதமாக இருந்தது. அப்படியே ஹோட்டல் போய் இருந்தால் அவளால் இரவு சரியாக உறங்கியே இருக்க முடியாது. அதிலும் அர்ஜுன் அடுத்த நாள் காலைக்கும் சேர்த்து உணவு வாங்க சொன்னது மஞ்சரியின் நலத்தில் அவனுக்கு உள்ள அக்கறையை அவளுக்கு உணர செய்தது. மூவரும் நன்றாக உணவு அருந்தி விட்டு மஞ்சரி தங்க வேண்டிய ஹோட்டல் சென்று அடைந்தார்கள். அங்கும் அர்ஜுன் மஞ்சரியை அப்படியே விட்டு போகவில்லை. அவளுடனே வந்து அவளுடைய அறையை சுற்றி பார்த்து விட்டு அங்கு உள்ள வசதிகளை பற்றி அவளுக்கு விளக்கம் சொல்லி விட்டு அவளிடம் விடைபெற்று சென்றான்.


    கதவை அவன் சொல்லி கொடுத்த மாதிரி லாக் செய்து விட்டு உடைமாற்றி கட்டிலில் விழுந்த மஞ்சரிக்கு அர்ஜுனின் நினைவாகவே இருந்தது. எப்படி சின்ன சின்ன விசயங்களை கூட மறக்கமால் உதவி செய்கிறான் என்று ஆச்சர்யமாய் இருந்தது அவளுக்கு. அவனை சந்தித்த கணத்திலிருந்து அவளது அனைத்து தேவைகளையும் அவனே நிறைவேற்றி வைத்த விதம் அவனை நல்ல நண்பனாக நினைக்க தோன்றியது.


    தூக்கம் வராமல் புரண்ட மஞ்சரி பெற்றோரிடமாவது பேசி பார்க்கலாம் என்று எழுந்தாள். வந்து சேர்ந்த உடனே அர்ஜுனின் செல் மூலமாக பேசி இருந்தாலும் அவர்களிடம் பேச வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அர்ஜுன் சொல்லி கொடுத்த விதமாக காலிங் கார்டை உபயோக படுத்தி பெற்றோரை அழைத்தாள்.

    "ஹலோ அம்மா, நான் மஞ்சரி பேசறேன்"

    "என்ன மஞ்சரி ஹோட்டல் போய் சேர்ந்தாச்சா? அங்க என்ன டைம் இப்போ?"

    "வந்துட்டேன்மா. இங்க ராத்திரி 12 மணி ஆச்சுமா"

    "இன்னுமா தூங்காம இருக்கே? நாளைக்கு ஆபீஸ் போக வேண்டாமா? சீக்கிரம் போய் தூங்கு. எதாவது சாப்டியா?"

    இப்படி ஆரம்பித்த அவர்களது பேச்சு முடிய ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆகி விட்டது. மஞ்சரி நடந்த அனைத்தையும் தன் தாயிடம் சொல்லி விட்டு மற்றவர்களிடம் பேசிவிட்டு படுக்க செல்ல மணி 1.30 ஆகி விட்டது.


    இங்கே அர்ஜுனும் முரளியின் கேள்விகளை சமாளித்து படுக்க செல்ல நள்ளிரவாகி விட்டது. அவனுக்கே தனது நிலை பற்றி தெரியாது இருக்கும் போது அவன் முரளிக்கு எதை விளக்குவது. தான் மஞ்சரியை விரும்பிகிரோமா? இது காலம் முழுதும் நிலைக்கும் உறவா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

    கல்லூரி காலத்திலிருந்தே அர்ஜுனுக்கு பெண்களிடம் இருந்த மரியாதை குறைய ஆரம்பித்து இருந்தது. அதுவும் இந்த காலத்து பெண்கள் காதல் என்று சொல்லி நடந்து கொள்ளும் முறை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் வளர்ந்த சூழ்நிலையில் அவனுக்கு பெண்களிடம் அதிகமாக ஒட்டுதல் இருந்தது இல்லை. கல்லூரி வரை ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளியில் பயின்றதால் தோழி என்று நெருக்கமாக அவன் யாரிடமும் பழகியது இல்லை. கல்லூரியிலும் அதற்கான சந்தர்பங்கள் அமைய வில்லை.

    ஆனால் மஞ்சரியை பார்க்க பார்க்க அவளிடம் சென்று பேச வேண்டும் அவளுக்கு வேண்டியது பார்த்து செய்ய வேண்டும் என்ற ஆவல் அவனிடம் அதிகரித்து கொண்டே இருந்தது. அவளிடம் பேசி கொண்டு இருந்ததும் அவனுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. நாளை முதல் அவள் தன் அருகில் தானே இருக்க போகிறாள் பழகி பார்த்தால் தெரிந்து விடும் என்று நினைத்து விட்டு தூங்கி போனான் அர்ஜுன்.
     
    Last edited: Jan 25, 2012
    4 people like this.
    Loading...

  2. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Priia..
    very nice update..
    so Manju ku Arjunai atlast pidichu potchu..
    naalai office il enna kootho?
    eagerly waiting ma..
    -devi.
     
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    safe ah vandhu sernthuttanga...
    arjun manjari kaga pathu pathu ellam seiradhu super ah irukku....
    naiaiku office ah???? manju voda reaction epdi irukunu parklam ...
     
  4. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi....
    arjun character super ah iruku..aana avanaku yen gals ah pidikathu..
    any secret behind it???
     
  5. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Priya,
    Arjun, Manjariyudan pazhagi parthu
    oru mudivukku varalaamnu mudivu seitha nee
    athukku munnaadiye munthi munthi uthavi seyyarathukku
    enna karanamnu engalukku konjam sollen.
    Muralike sollathathai ungalukka solla porenu ketkariyaa?
    Karanam therinjaal thaane unnaal solla mudiyum.
    Nalai officil Manjuu vazhiya pore asadai pidikka valiyoda waiting.
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    priia pa,

    அர்ஜுன்னுக்கு நாளைக்கு சரியான திட்டு விழபோகுதுனு நினைக்கறேன்....
    ஒகே ..... ரொம்ப நல்லா கொண்டுபோறீங்க பா....
     
  7. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Priia,

    Nalla irundhadu Arjun manjarikku parthu parthu seiyaradu. So, naalaiku Manjari kku shock kaathukittu irukku
     

Share This Page