நாள் என்பது துளி,துளியாய் இணைந்து, நிமிடமாய் வளர்ந்து,மணியாய் படர்ந்து, முற்பகல்,பிற்பகல்,அந்தி,சந்தி, முன்னிரவு,பின்னிரவு,சாமம்,என வித விதமாய் பெயர் கொண்ட இந்த பூமித்தாயின் ஒரு சுழற்சி. இவை அனைத்தும் மனிதனுக்கு பொது, ஆனால் ஒருவனுக்கு இனிமையானதை மற்றவனுக்கு கொடுமையானதை கொடுத்து ஒருபுறம் புத்தம் புது பிறப்பை பிரசவித்து, மறுபுறம் மண்ணில் நின்றவனை மறைத்து, ஒருவனுக்கு காமனவன் கணைகளை தொடுத்து, மற்றவனுக்கு விரக்திஎனும் வேதனையை கொடுத்து, சிலருக்கு கோடிகளில் புழங்கும் செல்வமதை தந்து, பலருக்கு தெருக்கோடியில் புரளுகிற நிலை கொடுத்து, மேலும் கீழும் ஆட்டி படைக்கும் இந்த நாளும்-பொழுதும், அனைவருக்கும் ஒன்றே,அதை அவரவர் வினைக்கு ஏற்றவாறு எப்பொழுது,யார் யார்க்கு எப்படி என இயற்றிய, இறைவன் அவன்,திறத்தை எண்ணவும் எம்மால் இயலுமோ?
That was a very nice collection of words which ended with a fantastic question Deepa. Happy to see your verses again. Thanks for sharing. -rgs
அன்புள்ள தோழி தீபா , நெடு நாள் கழித்து ( Missed you and the Agaram mudhal kavidhai thread), நாளும் கிழமையும் பற்றி நெடிய , நேர்த்தியான கவிதை உங்களிடம் இருந்து.......:thumbsup நல்ல சிந்தனை.......சொல் தேர்வு......சந்தங்கள்......:thumbsup படித்து ரசித்தேன்.......:coffee இந்த நாள் நமக்கு இனிய நாள் ஆகட்டும்......
Dear Deepa, Yadartha Sindhanaigal. Azaghaga thoduthu vazangiyamaikku mikka nanri. Arumaiyana varthaighal. Azaghana sindhanaigal. Thodarattum ungal kavidhaigal. Vazthukkal. Viswa
bargavi, thanks for your nice fb.always i want to be here,but some reasons are not allow that.agaram muthal mendum thodarvom.