நான்: இன்னியஎதிரொலி எங்கே உள்ளாய்? உன்னிடம் நானும் பேசிட வரவா ? எதி: வா, வா. நான்: நன்றாம் நாட்டில் என்றும் நீங்காத் துன்பமிங்கே வாட்டுதே மக்களை? எதி: களை, களை நான்: இத்தகு அவலம் நிகழ்ந்திடு மென்றோ வித் தகன் சுதந்திரம் வேண்டினான் அன்று? எதி: அன்று அன்று; நான்: களைந்திட வேண்டும் துன்பம் என்றால் களையும் வழியும் நீ கூ றயோ? எதி: ஓ ஓ! நான்: மக்கள் நன்கு உழைத்திட லுடனே ஊக்கத்துடனே செயல் பட வே ண்டுமாம். எதி: ஆம் ஆம்! நான்: தலைவர் யாரும் தன்னுடை நலத்தைத் தள்ளிப் பொது நலம் பேணிநல் செய்க எதி: செய்க செய்க! நான்: பொது நல வாழ்வு போகட்டு மிங்கே என்னுடை வாழ்வு சிறந்திட வழி புகல்; எதி: கல் கல் ; நான்: என்னுடை சொல்லே உ ன்னுடை பதிலோ ? என்றால் உன்னுடன் பேசலை நீபோ ! எதி: நீ போ நீ போ !
Nice attempt Madam. Just remembered this wonderful thirukkuraL when I read this piece - ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
எதிரொலி (ஸூர்யகலா ) கேட்டேன் ! மனசாட்சி (ஸ்ரீநிவாஸன்) பார்த்தேன் ! இரண்டும் வழங்கிய பாடங்கள் நன்று ! ஒன்று தரமான எண்ண வெளிப்பாட்டின் வகையில் மொழிந்த பேச்சொலியின் எதிர் விளைவு என்றால், மற்றொன்று சொல் உதிர்க்காமல் மௌனமாய் மனம் வழங்கும் ஞானம் ! ஒன்றில் சமூக நோக்கு, மற்றொன்றில் சுமுக வாழ்விற்கான நோக்கு ! நூல் நயமறிந்த நாவலர் நீங்கள் , நற்கவி நலமாய் நாளும் நல்கிறீர் ! நன்றென நவில நா நயமில்லை ! நன்றி நவில்கிறேன், நங்கை நானே !
Dear @rgsrinivasan , Nice to have your thoughtful response. I am so happy that the 'echo' of the poem on you is to take you to Thirukkural and the voice of conscience! I appreciate the depth your imagination! Thanks a lot.
அன்பு மகள் பவித்ரா, இத்தகு கவியால் இன்புற வாழ்த்தின் எத்தனை எத்தனை கவிகளும் எழுதலாம் மெத்தவே அழகுடை மேம்படு கருத்தால் சித்தமும் நிறைத்தனை சீருடை நங்காய்!