நல்லவை வரினும், அல்லவை வரினும், நாம் நல்லவை எண்ணி மகிழ்வதை முயலுவோம்! 'இருளாகிப் போனதே தமிழகம்', எனப் பலரும் பொருமும் வேளை இது; இதன் விளைவாய் 'இடைவிடா மின்சார விநியோகம்' செய்யும், தடையில்லாது மின்விசிறி சுழல வைக்கும், அந்த U P S பாட்டரி வியாபாரமும் ஓங்கியது! அதன் விளைவு? எத்தனை பேர் பிழைக்கிறார்! மின்னியல் வல்லுனர், 'பாட்டரி' செய்வோர், மின்சாரக் கம்பிகள் செய்வோர் ஆகியோரே! இது ஒரு புறம் இருக்க, இன்னொரு நன்மை! பொதுவாக வேறு வேறு அறைகளில் சென்று நேரத்தைக் கழிக்கும் குடும்ப உறுப்பினர்கள், நேரே அமர்கிறார், ஒரு மின் விசிறியின் கீழ்! பல மின் விசிறிகளைப் போட்டால், எப்படிப் பல மணி நேர மின்வெட்டை சமாளிப்பதாம்? குடும்ப ஒற்றுமை மறைமுகமாக ஓங்கிடக் கடும் மின் வெட்டை மகிழ்வுடன் ஏற்போம்! :rotfl
Dear rajiram, The last line was superb.The Electricity Board of Tamil Nadu is try to bring the Join Family system in T.N!. Olliga Family Planning system???