காற்று நுழையும் சாளரத்தின் வழியே காணும் பூத்துக் குலுங்கும் சிறுமரமும், வேற்றுமையின்றி அதன் மேலேறிக் குதூகலிக்கும் அணிலும் குருவியுமென் உற்ற நண்பர்கள் ! காட்சியில் மூழ்கும் போதே சட்டென மாறும் வானிலையோடு நாசி துளைக்கும் தூறல் கிளப்பும் நல் மண்வாசம் ! மீட்சி இவையே எனக்கு அந்நாளில் ! இப்படியான என் உலகத்தில் ஓர்நாள் காரிருள் சூழ்ந்தது, கயவர்கள் கைமாறு ! நிழலும் நன்மையும் அருளாய்ப் பொழியும் நன்மரத்தை வெட்டிச் சாய்த்த நரிகளுருவில் ! வசிப்பிடம் இழந்த அணிலும் குருவியும் நசித்தழுத ஓசை என் செவிகளறியும் ! சீ ! வெட்கித் தலை குனிந்தேன் நான் ! செயலற்றுப் பாவத்தைத் தடுக்க இயலாமைக்கு ! மரமற்ற வெற்றிடம் பார்க்கப் பொறுக்காமல் அவ்விடம் நான் நட்ட வேறொன்றும் கிளைக்கவில்லை, அம்மண் அறிந்தது போலும் நான் நன்றி கெட்டவள் என்று ! Regards, Pavithra
அன்பு மகள் பவித்ரா @PavithraS , மிக அழகிய கவிதை! அறிஞர் கலாம் கூறியது போல் மீண்டும் நட்டால், மீண்டு வரும் குருவியும் அணிலும்!
@jskls , @GoogleGlass , @sangeethakripa , @suryakala , @periamma , அன்பிற்குரியீர் ! உங்கள் ஆறுதலான பின்னூட்டங்களுக்கு நன்றி !